நாமக்கல், அக். 15- தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில், மாற்றுத்திறனாளிக ளுக்கு தொடர்ச்சியாக 100 நாட்க ளுக்கும் வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மாற்றுத்திறனாளி கள் சங்கத்தினர் மோகனூர் வட்டாட் சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், அனைத்து ஊராட்சிகளிலும் மாற் றுத்திறனாளிகளுக்கு தொடர்ச்சி யாக 100 நாட்களும் வழங்க வேலை வேண்டும். வீட்டுமனை இல்லா மாற் றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். மாற் றுத்திறனாளிகள் சுய தொழில் துவங்க அனைத்து வங்கிகளும் கட னுதவி வழங்க வேண்டும். பேருந்து பாஸ், ரயில்பாஸ் உள்ளிட்டவற்றில் கையெழுத்திட அனைத்து அரசு மருத்துவமனையிலும் மருத்துவர் கள் நியமித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி, மாற்றுத்திறனாளிகள் சங்கத் தினர் மோகனூர் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் தாலுகாத் தலைவர் மாதேஸ்வரன் தலைமை தாங்கினார். கோரிக்கை களை விளக்கி சங்கத்தின் அகில இந் திய செயல் தலைவர் நம்பு ராஜன், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளர் ஏ.ரங்கசாமி, சங்கத் தின் மாவட்ட அமைப்பாளர் எம்.ஆர். முருகேசன் உள்ளிட்டோர் உரையாற் றினார். இதனையடுத்து போராட்டக்கா ரர்களிடம் அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் அக். 25 ஆம் தேதி நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஆலோ சனைக் கூட்டம் நடத்தப்படும் என வும், தங்கள் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டம் தற்கா லிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக, இப்போராட்டத்தில் சங் கத்தின் நிர்வாகிகள் பெருமாள், முரு கேசன் மற்றும் ஏராமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.