திருப்பூர், செப். 19 - திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட் டம், சுக்கம்பாளையம் ஊராட்சியில் வழங்கப்படும் குடிநீரில் முறைகேட் டைக் களைந்து மக்களுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி அப் பகுதி மக்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுக்கம்பாளையம் கிராம மக்கள் இதுகுறித்து கூறியதாவது: இந்த ஊராட் சியில் குடிநீர் வழங்குவதில் பல்வேறு தில்லுமுல்லு முறைகேடுகள் நடந்துள் ளன. இதனால் மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை. இது குறித்து வருடகணக்கில் புகார் மனுக் கள் கொடுத்தும் கிராம சபையில் பேசி யும் எந்த பயனும் இல்லை. மக்களுக் கான அடிப்படை தேவையாக உள்ள குடிநீர் பிரச்சினை இதுவரை தீர்ந்தபா டில்லை. கோவை விளாங்குறிச்சியில் உள்ள பில்லூர் இரண்டாம் குடிநீர் திட்ட பொறி யாளர் இந்த ஊராட்சிக்கு நாள் ஒன் றுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்கி வருவதாகத் தெரிவித் துள்ளார். ஆனால் ஊராட்சி நிர்வாகத் தில்தான் குடிநீர் வழங்குவதில் பிரச் சனை உள்ளது என்றும் கூறியுள்ளார். மேலும் குடிநீர் வழங்கிவரும் அளவு மீட்டரை 10 நாட்களுக்கு பார்வையி டவும் அனுமதித்தனர். அதில் இங்கு குடி தண்ணீர் வரத்து குறித்தான கணக் கீடு மீட்டரை மூன்று நாட்கள் பார்வை யிட்டு அறிந்து கொண்டதில், அங்கி ருந்து வழங்கப்படும் குடிநீர் முறை யான அளவு இருப்பது தெரிகிறது. எனவே ஊராட்சிக்குள் குடிநீர் வழங் குவதில் பல்வேறு ஊழல் முறைகே டுகள் நடந்து வருவது தெளிவாக அம்ப லமாகியுள்ளது என்றும் மக்கள் கூறு கின்றனர். எனவே இப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டி சுக்கம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப் பட்டு செவ்வாய்கிழமை முதல் இப் போராட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.