districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கேஸ் டேங்கர் லாரி விபத்து: ஓட்டுநர் கைது

கேஸ் டேங்கர் லாரி விபத்து: ஓட்டுநர் கைது கோவை, ஜன.4- கோவையில் பாரத் பெட்ரோலியம் நிறுவன கேஸ்  டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக, லாரி ஓட்டுநரை காவல் துறையினர் கைது  செய்து, சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், உப்பிலிபாளையம் மேம்பாலத் தில் வெள்ளியன்று பாரத் பெட்ரோலியம் நிறுவனத் தின் எல்பிஜி கேஸ் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்திற் குள்ளானது. அப்போது வாயு கசிவு ஏற்பட்ட நிலையில்,  அதை சரி செய்து சுமார் 11 மணி நேர போராட்டத் திற்கு பின்னர் டேங்கர் மீட்கப்பட்டு, பாரத் கேஸ் பிளான் டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக கோவை மேற்கு போக்குவரத்து புலானாய்வு போலீ சார் மேற்கொண்ட விசாரணையில், லாரி ஓட்டுநரின்  அஜாக்கிரதை காரணமாகவே விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து லாரி ஓட்டுநர் ராதா கிருஷ்ணன் மீது, ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டு தல், மரணம் விளைக்கக்கூடிய விதத்தில் ஓட்டுதல், வாக னத்தை வேகமாக ஓட்டுதல், வெடிபொருள் சட்டம், பெட் ரோலியம் சட்டம், சுற்று சூழல் சட்டம், 184 மற்றும்  190 மோட்டார் பாதுகாப்பு சட்டம் என 8 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதன் பின் அவரை நீதிபதி முன்பு நேர்நிறுத்தி கோவை மத் திய சிறையில் அடைத்தனர்.

மாணவனை காலால் உதைத்ததாக ஆசிரியர் மீது வழக்குப்பதிவு

மாணவனை காலால் உதைத்ததாக ஆசிரியர் மீது வழக்குப்பதிவு தருமபுரி, ஜன.4- பென்னாகரம் அருகே அரசுப்பள்ளி மாணவனை, செருப்பு காலால் எட்டி உதைத்த ஆசிரியர் மீது காவல்  துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், சின்னப் பெருமானூர் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது மாணவன்,  அங்குள்ள அரசுப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகி றார். இந்நிலையில், ஜன.2 ஆம் தேதியன்று காலை  வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். சுமார் 12:30  மணிக்கு மேல் அறிவியல் பாடம் எடுப்பதற்காக வகுப்பா சிரியர் வெற்றிவேல் வகுப்பிற்கு சென்றுள்ளார். அப் போது வகுப்பறையில் ஆசிரியர், அனைவரையும் அமைதியாக இருக்கச் சொல்லியுள்ளார். அப்போது  மாணவன் எழுந்து ஆசிரியரிடம் பாடம் குறித்து விளக்கம்  கேட்டுள்ளார். அதற்கு, ஆசிரியர் வெற்றிவேல், எல்லோ ரும் சத்தம் போட்டு கோபப்படுத்துகின்றனர். நீயும் என்னை கோபப்படுத்துகிறாயா? எனக்கூறி, செருப்பு காலால் அந்த மாணவனை நெஞ்சில் எட்டி உதைத்து, தாக்கியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவன்  பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற  நிலையில், மாணவன் கொடுத்த புகாரின் பேரில், காவல்  துறையினர் ஆசிரியர் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு  செய்து விசாரித்து வருகின்றனர்.

தொழிற்சாலை மதில் சுவர் சரிந்து விழுந்து 2 பேர் பலி

கோவை, ஜன.4- கிணத்துக்கடவு அருகே தனியார் தொழிற் சாலை மதில் சுவர் கட்டிய போது, சுவர்  சரிந்து விழுந்து 2 வடமாநில தொழிலாளி கள் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறை யினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள காணியாலாம்பாளையத்தில் 9 ஏக்கர் பரப்பளவில் தனியார் தொழிற் சாலை கட்டப்பட்டு வருகிறது. இப்பணியில்  60க்கும் மேற்பட்ட வடமாநில மற்றும் உள் ளூர் தொழிலாளர்கள் வேலை செய்து வரு கின்றனர். இந்த தொழிற்சாலைக்கு தற்போது  சுற்று சுவர்கட்டும் பணி நடைபெற்று வருகி றது. இந்நிலையில், சனியன்று வழக்கம் போல் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்ற போது, மதியம் டீ சாப்பிடுவதற்காக அனை வரும் சென்றனர். அப்போது மற்றொரு பகுதி யில் இருந்து ஜேசிபி எந்திரம் மூலம் மணல் சுவர்களுக்கு இடையே தள்ளப்பட்டபோது,  புதிதாக கட்டப்பட்ட சுவர் அருகே டீ சாப் பிட்டு விட்டு வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ரெகேசன் (29), சனார்மான்ஜி (40) ஆகியோர் மீது சுவர் சரிந்து விழுந்தது. இதனை பார்த்த மற்ற தொழிலாளர்கள் இடி பாடுகளுக்கு அடியில் சிக்கிய இரண்டு வட மாநில தொழிலாளர்களை மீட்டு கிச்சைக் காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியில் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பொள்ளாச்சி உதவி காவல் கண் காணிப்பாளர் சிருஷ்டிசிங் சம்பவ இடத்திற்கு  சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

சிபிஎம் தளி பேரூராட்சி துணைத் தலைவர் மீது சாதிய தாக்குதல் நடத்தியவர் சிறையில் அடைப்பு

திருப்பூர், ஜன.4- மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த  தளி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மீது சாதிவெறித் தாக்கு தல் நடத்திய அதிமுக பிரமுகர் சின்னு (எ) கருணாகரனுக்கு, திருப் பூர் மாவட்ட எஸ்.சி/எஸ்.டி. வன் கொடுமைத் தடுப்பு வழக்கு சிறப்பு  நீதிமன்றத்தில் சனியன்று ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். திருப்பூர் மாவட்டம் தளி பேரூ ராட்சி துணைத்தலைவராக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப் பூர் மாவட்டக்குழு உறுப்பினரும், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவருமான கோ.செல்வன் செயல்பட்டு வருகி றார். இவர் கடந்த டிச.18 ஆம்  தேதியன்று, பேரூராட்சி அலுவல கத்தில், நடைபெறும் வேலைகள் குறித்து அலுவலர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்த சின்னு (எ) கருணாகரன், தளி  பேரூராட்சியில் வேலைகளைச் செய்ய நீ யார் என்றும், மலைவாழ்  சமூகத்தைச் சேர்ந்த செல்வனின்  சாதியைச் சொல்லி இழிவாகப்  பேசி, அவர் மீது தாக்குதல் நடத்தி னார். இதையடுத்து செல்வன் மீது  தாக்குதல் நடத்திய அதிமுக பிரமு கர் சின்னு (எ) கருணாகரன் மீது  எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப் புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத் தியது. இந்த கோரிக்கையை வலி யுறுத்தி டிச.22 ஆம் தேதியன்று ஞாயிறன்று தளி பேரூராட்சி அலு வலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்நிலையில், தளி காவல் நிலையத்தில் சின்ன (எ) கருணாகரன் மீது எஸ்.சி/ எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச்  சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கில் கைது செய் யப்படும் நிலை இருந்ததால் சின்னு  (எ) கருணாகரன் முன்ஜாமீன் பெறு வதற்கு சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகினார். அங்கு அவரது கோரிக்கையை விசாரித்த நீதிபதி, திருப்பூர் மாவட்ட எஸ்.சி.,  எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு  வழக்கு சிறப்பு நீதிமன்றத்தை அணுகுமாறு கூறினார். இதை யடுத்து சனிக்கிழமை திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் சின்னு (எ) கருணாகரன் முன் ஜாமீன் கோரி முறையீடு செய் தார். அப்போது தளி பேரூராட்சி துணைத்தலைவர் செல்வன் தரப் பில் வழக்கறிஞர் வை.ஆனந்தன் ஆஜராகி, சின்னுவுக்கு முன்ஜா மீன் வழங்க ஆட்சேபம் தெரிவித் தார். குறிப்பாக தளி பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்குள்ளேயே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிர திநிதியான செல்வன் மீது இவர்  சாதியைச் சொல்லி இழிவாகப் பேசித் தாக்குதல் நடத்தியது, ஒடுக் கப்பட்ட மக்களை அச்சமூட்டக் கூடிய செயல். ஏற்கெனவே சின்னு  மீது கடந்த காலத்தில் வழக்கு உள் ளது. இவருக்கு முன் ஜாமீன் வழங் குவது அப்பகுதி மக்களுக்கு அச் சத்தை ஏற்படுத்தும் என்று ஆட் சேபம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு நீதிமன்ற  நீதிபதி சின்னு (எ) கருணாகரனுக்கு  ஜாமீன் மறுத்து ஜன.10 ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அவரை உடனடியாக கைது செய்த காவல் துறையினர் சிறை யில் அடைக்க அழைத்துச் சென்ற னர்.

பயனாளி ஒப்புதல் இன்றி ரூ.1லட்சம் பிடித்த எச்டிஎப்சி வங்கி ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

திருப்பூர், ஜன.4 - திருப்பூரில் எச்டிஎப்சி வங்கி, பயனாளி யின் ஒப்புதல் இல்லாமல் அவரது வங்கிக்  கணக்கில் இருந்து ரூ.1லட்சம் தொகையை பிடித்தம் செய்து கொண்டது. இது நேர்மை யற்ற வர்த்தக நடவடிக்கை என்பதால் பாதிக் கப்பட்டவருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு திருப்பூர் நுகர்வோர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:  காஞ்சிபு ரம் மாவட்டம் தாமரைப்பாக்கத்தை சேர்ந்த வர் பெருமாள். இவர் திருப்பூர் அருகே இடு வாய் வஞ்சிபாளையம் மகாலட்சுமி நகரில்  குடியிருந்து, தனியார் பனியன் நிறுவனத்தில்  வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருவண்ணாமலையில் உள்ள எச்டிஎப்சி வங்கியின் ஊழியர், பெரு மாளை தொடர்பு கொண்டு, காப்பீடு பெறு வதற்காக கடன் தருவதாகவும் அதை இஎம்ஐ  மாதத் தவணை முறையில் செலுத்தலாம் என்றும் கூறியிருக்கிறார். அத்துடன் இவரது  ஒப்புதல் பெறாமலே, ரூ. 7701 கடன் வழங்கப் பட்டு, மாதந்தோறும் ரூ.484  இவரது வங்கிக்  கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டுள் ளது.  இந்த விபரம் அறிந்து பெருமாள் வங்கியை தொடர்பு கொண்டு தனது வங்கிக்  கணக்கில் கடன் கொடுத்து இஎம்ஐ பிடிப் பதை நிறுத்த வேண்டும் என்று ஆட்சே பனை தெரிவித்துள்ளார்.  இதற்கிடையே திருப்பூர் எச்டிஎஃப்சி வங் கியில் பெருமாளின் வங்கிக் கணக்கில் இவ ரது தொழில் நடவடிக்கைக்காக, வேறொரு வர் கொடுத்த ரூ.1 லட்சத்திற்கான காசோ லையை செலுத்தியிருக்கிறார். காசோலை வரவாகி பணம் பெறலாம்  என வங்கிக் கிளைக்குச் சென்று கேட்டபோது,  இவர் ஏற்கெனவே காப்பீட்டுக்காகப் பெற்ற  கடன், வட்டி சேர்ந்து ரூ.1 லட்சத்து 77 ஆயிரம்  தர வேண்டியிருக்கிறது. எனவே காசோ லைக்குரிய ரூ.1 லட்சம் பணத்தை பிடித்தம் செய்துள்ளதாக வங்கி நிர்வாகத்தினர் தெரி வித்துள்ளனர். ஏற்கெனவே காப்பீட்டு கடன் பெற விருப்ப மின்மையைத் தெரிவித்த பிறகும், கடன்  கொடுத்து, இஎம்ஐ தவணை காலத்தையும் அதிகரித்து அதற்கும் வட்டி விதித்து ரூ.1லட் சத்து 77 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று  சொன்னதுடன், தனது தொழில் நடவடிக் கைக்கு உரிய ரூ.1 லட்சம் பணத்தையும் தர  மறுத்ததால் பெருமாள் மன உளைச்சலுக்கு ஆளாகி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத்  தொடுத்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெருமாள்  தரப்பில் வழக்கறிஞர் வை.ஆனந்தன் ஆஜ ராகி வாதாடினார்.  நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு விசார ணை நடைபெற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் எச்டிஎப்சி வங்கி நிர்வாகம்  வாடிக்கை யாளர் பெருமாளின் ஒப்புதல் இல்லாமல் காப் பீட்டுக் கடன் கொடுத்தது, இஎம்ஐ கூடுதல் தவணை வசூலிக்க நிர்ணயம் செய்தது, இவ ரது தொழில் நடவடிக்கைக்காக வழங்கப் பட்ட ரூ.1 லட்சம் தொகையை நுகர்வோரின் ஒப்புதல் பெறாமல் தன்னிச்சையாக வங்கிக்  கணக்கில் பணம் பிடித்தம் செய்தது தவறு  என்று கூறியது. எனவே எச்டிஎப்சி வங்கி  நிர்வாகம்  அவரது ரூ.1 லட்சம் தொகையை  உடனடியாக அவருக்கு வழங்க வேண்டும். பிடித்தம் செய்த காலத்தில் இருந்து 9 சதவிகித  வட்டியுடன் அந்த தொகையை வழங்க வேண்டும். நேர்மையற்ற வர்த்தக நடவ டிக்கைக்காக பாதிக்கப்பட்டவருக்கு ரூ.40  ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் திருப்பூர்  நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி அருகே விபத்தில் இறந்தோர் மூவர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி

தூத்துக்குடி அருகே விபத்தில் இறந்தோர் மூவர் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி திருப்பூர், ஜன.4– தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே கடந்த மாதம் 25ஆம் தேதி சாலை விபத்தில் திருப்பூர் மாவட்டம் அலங்கியத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். ஒருவர் காயம டைந்தார். இறந்தோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம்  மற்றும் காயமடைந்தவருக்கு ரூ.50 ஆயிரம் முதலமைச்சரின்  பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வட்டம், மதுரை -  தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை, மேலக்கரந்தை கிராமத் தில் டிசம்பர் 25 அன்று அதிகாலை விபத்து நேர்ந்தது. இதில்  திருப்பூர் மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூருக்குச் சென்ற  கார் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னால் வந்த கண் டெய்னர் லாரி காரின் மீது மோதியது. இதில் காரில் பயணம்  செய்த 5 பேரில் தாராபுரம் வட்டம், அலங்கியம் கிராமத்தைச்  சேர்ந்த ப.விஜயகுமார் (வயது 38) ஆ.செல்வராஜ் (வயது  38) மற்றும் கா.விக்னேஷ் (வயது 31) ஆகிய மூவர் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தனர். மகேஷ்குமார் என்பவர் காய மடைந்தார். இந்த விபத்தில் உயிரிழந்த மூவர் குடும்பத்திற்கு முதல்வர்  மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, முதலமைச்சர் பொது நிவாரண  நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் மற்றும் காயமடைந்த மகேஷ் குமாருக்கு ரூ.50 ஆயிரம் தொகைக்கான காசோலைகளை, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வ ராஜ் பாதிக்கப்பட்டோர் வீட்டிற்கு நேரில் சென்று வழங்கி னார். இதில் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், தாராபுரம்  கோட்டாட்சியர் ஃபெலிக்ஸ்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.

அண்ணா பிறந்த தின மிதிவண்டிப்போட்டி

திருப்பூர், ஜன.4- திருப்பூர் மாநகராட்சி,  சிக்கண்ணா அரசு கலைக்கல் லூரியில் பேரறிஞர் அண்ணா  பிறந்த நாளை முன்னிட்டு,  அண்ணா பிறந்த தின மிதி வண்டிப்போட்டியை கொடி யசைத்து மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் சனியன்று துவக்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் பேரறிஞர் அண்ணா  பிறந்த  நாளை முன்னிட்டு மிதிவண் டிப்போட்டிகள் நடத்தப்பட்டு  வருகிறது. அதன் படி 13 வய திற்குட்பட்டவர்கள், 15 வய திற்குட்பட்டவர்கள் மற்றும்  17 வயதிற்குட்பட்டவர்கள் என்று மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது.  இந்நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலு வலர் ரகுகுமார் மற்றும் துறை  சாரந்த அலுவலர்கள் கலந்து  கொண்டனர்.