அவிநாசி, மார்ச் 18- அவிநாசி அருகே கொடிகாத்த குமரன் நகர் பகுதியில் தார்ச்சாலை அமைக்கும் பணி வெள்ளியன்று துவங்கப்பட் டது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம் வேலாயுதம்பா ளையம் ஊராட்சிக்குட்பட்ட கொடி காத்த குமரன் நகர் பகுதி யில் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 25 ஆண்டுகளுக்கு மேலாக தார்ச்சாலை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். சாலை வசதி அமைத்துத் தருமாறு ஊராட்சிமன்ற தலைவரிடத்தில் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து ரூ. 17 லட்சம் மதிப் பீட்டில் 15 ஆவது நிதிக்குழு மானியம் மூலமாக காங்கிரீட் சாலை அமைக்கம் பணிதுவங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வேலுச்சாமி, வார்டு உறுப்பினர்கள் பிரகாஷ், ஜெகநாதன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.