districts

மன உளைச்சல், தற்கொலை எண்ணம் தோன்றுகிறது!

திருப்பூர், அக். 25 – திருப்பூர் மாநகரின் மையத்தில் அமைந்திருக்கும் வடக்கு காவல் நிலையத்தின் ஆய்வாளர் உதயகு மார் பாரபட்சம் காட்டி, விடுமுறை தரா மல், கடுமையான வேலைப்பளுவை  தருவதால் மன உளைச்சல் ஏற்படுவ துடன், தற்கொலை செய்து கொள் ளும் எண்ணமும் தோன்றுகிறது என்று அந்த காவல் நிலையத்தில் வேலை செய்யும் காவலர்கள் சரமாரி யாக புகார் கூறுகின்றனர். திருப்பூர் மாநகர வடக்கு காவல் நிலைய ஆய்வாளராக உதயகுமார் பணியாற்றி வருகிறார். இவர் மீது  இந்த காவல் நிலையத்தில் வேலை  செய்யும் காவலர்கள் அடுக்கடுக் கான குற்றசாட்டுகளை கூறுகின்ற னர். காலை 8 மணி முதல் இரவு 8 மணி  வரை எ, பி, சி ஷிப்ட் போடுகிறார். தனக்கு எதிரானவர்கள் என்று இவர் கருதும் ஆட்களைத் தொடர்ந்து வேலை வாங்குகிறார். சீனியர், ஜூனியர் என்று பார்க்காமல் ஏ.ஆர்  போலீஸ் செய்ய வேண்டிய வேலையை சீனியர் எஸ்ஐகளை செய்யச் சொல்கிறார். இன்சார்ஜ் டியூட்டி, இரவு நேர ரோந்து பணி செய்ய வேண்டியவர்களுக்கு தபால்  டூட்டி கொடுக்கிறார். இரவு நேரங்க ளில் சீனியர்களை ஜூனியர்கள் தணிக்கை செய்வதால், சீனியர்கள்  மன உளைச்சலுக்கு உள்ளாகின்ற னர். மருத்துவ விடுமுறை முடித்து வருபவர்களுக்கு உடனடியாக டூட்டி  போடாமல் 3 நாட்கள் காக்க வைக்கி றார். காவல் நிலையங்களில் இருந்து சென்னை உயர் நீதிமன்றத்திற்கு செல்பவர்கள் ஓரிரு நாட்களில் திரும்பி விடுகின்றனர். உயர் நீதி மன்றம் டூட்டி போட்டால் 4, 5 நாட்கள்  அங்கேயே இருக்க சொல்கிறார். நீதி மன்ற டூட்டி பார்த்து விட்டு திருப்பூ ருக்கு திருப்பி வருபவர்களுக்கு ஓய்வு அளிக்காமல், அப்படியே வெளி மாவட்ட பந்தோபஸ்த்துக்கு அனுப்பி விடுகிறார். அனைத்து காவல் நிலையங்களிலும் டர்ன்  (வரிசை) படிதான் டூட்டி போடுவார் கள். இந்த காவல் நிலையத்தில் மட் டும் டர்ன் என்பதே கிடையாது. ரைட் டர் தான் டூட்டி போட வேண்டும். இங்கு  காவல் ஆய்வாளர்தான் டூட்டி போடு கிறார். காவல் நிலையத்தை கார்ப ரேட் கம்பெனி போல் நடத்துகிறார்.

இவருக்கு வேண்டிய ஆட்களை ஒரு  மாதிரியும், வேண்டாத ஆட்களை ஒரு மாதிரியும் ஒருதலைபட்சமாக நடத்துகிறார். மாநகர காவல் நிலை யங்களில் எ,பி,சி என்று மூனு சிப்ட்  இருக்கும். இவர் இரண்டு சிப்டுகள் வேலை வாங்கிவிட்டு உடனடியாக பந்தோபஸ்து டூட்டி போடுகிறார். பழிவாங்கும் நோக்கத்தில் செயல் படுகிறார். இதனால் காவலர்கள் மிகுந்த மன  உளைச்சலில் இருகின்றனர். வாக னம் ஓட்டும்போது கவனம் சிதறுகி றது, தற்கொலை எண்ணம் தோன்று கிறது. காவல்துறை ஆய்வாளர் போல் செயல்படாமல் பிற காவலர் கள் தனக்கு கீழ் வேலை செய்யும்  பணியாட்களை போல நடத்துகி றார். வேறு சரகத்தை சேர்ந்த அதி காரிகள் இங்குள்ள காவலர்களை தனித்தனியாக விசாரித்தால் உண்மை நிலை வெளியே வரும். இவர் மீது உரிய நடவடிக்கை எடுத் தால் மட்டுமே காவலர்கள் மன அழுத் தம் இல்லாமல் பணி செய்ய முடியும்  என்று கூறுகின்றனர். தமிழக காவல் துறை மாநகர,  மாவட்ட காவல் நிலையங்களில் வேலை செய்யும் காவலர்களுக்கு அந்தந்த மட்டத்தில் குறைதீர்க் கூட் டங்கள் நடத்துவதாக அறிவித்தி ருந்தது. ஆனால் ஏனோ சமீப நாட் களாக அத்தகைய கூட்டங்கள் எது வும் நடத்தப்படுவதில்லை. மேலும் தாங்கள் மேலதிகாரிகள் மீது புகார் கூறினால் குறைகளை சரி  செய்வதற்கு பதிலாக, புகார் கூறு வோரை குறி வைத்து மென்மேலும் பழிவாங்கும் வேலையில்தான் ஈடுப டுகின்றனர். இதற்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று காவலர்கள் மனக்குமுறலை வெளிப்படுத்துகின்றனர். மாநகர காவல் ஆணையர் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பாரா?