கோவை வழியாக செல்லும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
கோவை, ஜூன் 5- சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, கோவை, போத் தனூர், சேலம், திருப்பூர், ஈரோடு, வழியாக இயக்கப்ப டும் ரயில்களில் கூடுதலாக படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது. இதன்படி மங்களூரு சென்ட்ரல்-சென்னை சென்ட்ரல் இடை யிலான வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் (எண்: 22638) படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி நிரந்தரமாக இணைத்து இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல்-மங்களூரு சென்ட் ரல் இடையிலான வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22637), சென்னை சென்ட்ரல்-மங்களுரு சென்ட்ரல் மெயில் ரயில் (12601), மங்களுரு சென்ட்ரல்-சென்னை சென்ட்ரல் மெயில் ரயில் (எண்:12602), ஆகியவற்றில் படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி நிரந்தரமாக இணைத்து இயக்கப்படுகிறது. இதேபோன்று திருவனந்தபுரம் - ஷாலிமர் இடையே வாரம் 2 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22641), ஷாலிமர் - திருவனந்தபுரம் இடையே வாரம் 2 முறை இயக்கப் படும் ரயில் (எண்:22642), கன்னியாகுமரி - ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவிகத்ரா ரயில்நிலையம் இடையே இயக்கப்படும் ரயில் (எண்:16317), ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா ரயில்நிலையம் - கன்னியா குமரி இடையே இயக்கப்படும் ரயில் (எண்:16317) ஆகிய வற்றில் படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைத்து இயக்கப்படுகிறது. மேலும், ஹரியானா மாநிலம் ஹிசார்-கோவை இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (எண்: 22475), ஜூன் 1 ஆம் தேதி முதல் 2 ஏ.சி மூன்றாம் வகுப்பு பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது. கோவை-ஹிசார் இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் (எண்:22476), முதல் 2 ஏ.சி மூன்றாம் வகுப்பு பெட்டி கள் இணைத்து இயக்கப்படுகிறது என சேலம் கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரூ.3.50 கோடி கோவில் நிலம் மீட்பு
ஈரோடு, ஜூன் 5- ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி செல்லாண் டியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.3.50 கோடி மதிப்புள்ள நிலம் மீட்கப்பட் டது. ஈரோடு மொடக்குறிச்சி குளூர் கிராமத்தில் செல் லாண்டியம்மன் கோவி லுக்கு சொந்தமான 6 ஏக்கர் 13 சென்ட் புஞ்சை நிலம் தனி நபர்கள் ஆக்கிரமிப்பில் இருந்தது. இதுதொடர்பான வழக்கு ஈரோடு இணை ஆணையாளர் நீதிமன்றத் தில் நடந்து வந்தது. விசா ரணை முடிந்து இந்துசமய அறிநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி உத்தரவின்பேரில், ஈரோடு உதவி ஆணையாளர் அன் னக்கொடியால் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தின் சந்தை மதிப்பு ரூ.3 கோடியே 50 லட்சம் ஆகும். இதில், கோவில் தர்க்கார் ராஜாகோபால், சரக ஆய்வாளர் தேன் மொழி, கோவில் பணியா ளர்கள் ராதாகிருஷ்ணன், சுந்தரராஜ், நல்லசாமி, ராஜா ஆகியோர் உடனி ருந்தனர்.
கருமுட்டை விற்பனை முறைகேடுகளை சிபிசிஐடி விசாரிக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
ஈரோடு, ஜூன் 5- கருமுட்டை விற்பனை தொடர் பான சட்டவிரோத நடவடிக்கைகளை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு மாவட்டக்குழு கூட்டம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.விஜ யராகவன் தலைமையில் நடைபெற் றது. இதில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர் ராதிகா, மாவட்ட செய லாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். இக்கூட்டத்தில், தற்போதைய உணவு பழக்கம், உடல் எடை அதிக ரிப்பு உள்ளிட்ட வாழ்க்கை முறையால் குழந்தையின்மை அதிகரித்துள்ளது. இதனைப் போக்கும் வகையில் ஏரா ளமான கருத்தரிப்பு மையங்களும் உருவாகியுள்ளது. இதனால், குழந்தையின்மை பிரச்சனைக்கு ஒரு புறம் தீர்வு காணப்பட்டாலும், மறுபுறம் லட்சக்கணக்கில் பண பரிமாற்றம், அப்பாவி இளம்பெண்கள் பாதிக்கப் படுவது போன்ற முறைகேடுகள் நடை பெறுகின்றன. ஈரோட்டில் கரு முட்டை விற்பனை தொடர்பான வழக்கில் ஈரோடு தெற்கு காவல் துறையினர் இது வரை 4 பேரை கைது செய்துள்ளனர். இவ்வழக்கில் முழு உண்மைகள் வெளிவரவும், உண்மையான குற்ற வாளிகள் தண்டிக்கப்படவும் சிபிசி ஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண் டும்.
சென்னை மருத்துவ குழு விசாரணை
இந்நிலையில் ஈரோட்டில் கரு முட்டை விற்பனை தொடர்பாக சென்னை மருத்துவ குழு ஞாயிறன்று விசாரணை நடத்தியது. ஈரோட்டில் 16 வயது சிறுமியின் தாய் மற்றும் அவருடன் பழக்கதில் இருந்தவர் இணைந்து சிறுமியின் கரு முட்டையை 8 முறை விற்பனை செய் யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியது. சிறுமியின் பெயர், பிறந்த தேதி, ஆதார் அட்டையை போலியாக தயாரித்து ஈரோடு, சேலம், பெருந் துறை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் கருமுட்டையை விற்பனை செய்யப் பட்டது விசாரணையில் தெரியவந் தது. இதனையடுத்து சிறுமியின் தாய், பெயிண்டர், தரகர் மாலதி, ஜான் ஆகியோரை போக்சோ உள்ளிட்ட 10 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இது தொடர்பாக ஈரோடு கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கருமுட்டை விவகாரம், போலி ஆதார் அட்டை தயாரித்தது தொடர்பாக ஈரோடு, பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், சென்னை மருத் துவ கல்லூரி இயக்குனரகத்தில் இருந்து மருத்துவ அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு அவர்கள் விசார ணைக்காக ஈரோடுக்கு வந்துள்ளனர். இந்த மருத்துவ குழு ஞாயிறன்று அரசு காப்பகத்தில் இருக்கும் பாதிக்கப் பட்ட சிறுமியிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மருத்துவ மனைகளுக்கு மருத்துவ குழு விசா ரணை மேற்கொள்ள திட்டமிட்டுள் ளது. இந்த குழு அனைத்து மருத்துவ மனைகளிலும் விசாரணையை மேற் கொண்டு அதன் அறிக்கையை அர சுக்கு சமர்ப்பிக்கும். இதனடிப்படை யில் அடுத்த கட்ட விசாரணை இருக் கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விசாரணையின் அடிப்படை யில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை தவறு செய்தது கண்டு பிடிக்கப்பட் டால் அதன் உரிமம் ரத்தாகும் வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரி வித்தனர்.
மலைப்பகுதிகளில் 46 பள்ளி கட்டிடங்கள் புனரமைப்பு அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்
ஈரோடு, ஜூன் 5- ஈரோடு மாவட்ட மலைப்பகுதிகளில் உள்ள 46 பள்ளி கட்டிடங்களில் ரூ.1 கோடி மதிப்பில் புனரமைப்பு பணி களை அமைச்சர் சு.முத்துசாமி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில், மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பணிகளை தொடக்கி வைத்து பேசியதாவது,கடம்பூர், தாள வாடி, பர்கூர் ஆகிய மலைப்பிரதேசங்களில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகை யில் வேலைவாய்ப்பு அலுவலக வழி காட்டும் மையம் கல் கடம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் போட்டித்தேர்வு களுக்கான இலவச இணைய வழி பயிற்சிவகுப்பு இணைய வழியில் தொடங்கப்படுகிறது. மலைவாழ் மக்களுக்கான புன்னகை என்ற இணைய வழி மருத்துவ சேவை மற்றும் கல்வி சேவையும் வழங்கப்ப டும். இதில் கல்வி சேவையானது பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளியில் பயிலும் 32 மாணவ, மாணவியர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் இணைய வழியில் நடத்தப்படும். பள்ளி இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து ஆசிரியர்கள் பள்ளியில் சேர்க்க வேண்டும். பள்ளியில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். மேலும், நபார்டு வங்கியின் மூலமாக வளர்ச்சி திட்டப்பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மேயர் நாகரத்தினம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லி.மதுபாலன் , மாவட்ட வன அலுவலர் கௌதம், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினி சந்திரா, நபார்டு வங்கி துணை பொதுமேலா ளர் கோ.சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் வட்டாரத்தில் சின்ன வெங்காய சாகுபடி
திருப்பூர் ஜூன் 5- பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் விவ சாயிகளின் முக்கிய சாகுபடியாக சின்ன வெங்காய உள்ளது. இங்கு சாகுபடி செய்யப்படும் சின்ன வெங்காயம் தமிழகத் தின் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. வெங்காய சாகுபடி ஆண்டு முழுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனால் வெங்காய விலையில் அதிக அளவு ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. இந்நிலையில் ஆண்டு தோறும் வைகாசி பட்டத்தில் சின்ன வெங்காயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுவது வழக் கம். மேலும் இந்த பருவம் சாகுபடி செய்யப்படும் வெங்கா யத்தை இருப்பு வைக்க முடியும, ஐப்பசி, கார்த்திகை மாதங் களில் விளைச்சல் இல்லாத போது நல்ல விலை கிடைக் கும். இந்த ஆண்டுக்கான வைகாசி பட்டம் துவங்கியுள் ளது.
திடக்கழிவு மேலாண்மை குறித்து பள்ளி மாணவர்களுக்கு போட்டி
உடுமலை, ஜூன் 5- உடுமலையில் சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படுகிறது. உடுமலை தாலுகாவில் உள்ள பேரூராட்சிகளில், நகரங் களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் என்ற பெயரில் துாய் மைப்பணி மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி வீடுகளி லேயே மக்கும், மக்காத குப்பையாக வகை பிரித்து, சுற்றுப் புற தூய்மை, பாலித்தீன் தவிர்ப்பு குறித்து அறிவுறுத்தப் படுகிறது. இதற்கென இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமையில், ஒவ்வொரு தலைப்புகளின் கீழ் விழிப் புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதேபோல அடுத்த மாதம், 9 ஆம் தேதி சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை நடவ டிக்கைகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவர் களுக்கு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது, குடியிருப்பு பகுதியில் சுகாதாரம் பேண நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அவ்வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு கழிவுநீரை பாதுகாப்பாக அகற்றுவது, திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற நிலையை உருவாக்குவது, சமூக மற்றும் பொது கழிப்பறை சுத்தம் தொடர்பான ஓவியப்போட்டி நடத்தப்படும். மேலும், இவை தொடர்பான கண்காட்சி, குறும்படங்கள் திரையிடுவது, வீதி நாடகப்போட்டி நடத்துவது உள்ளிட்ட செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும். வீணாக வீசியெறியப் படும் பொருளில் இருந்து கலைநயமிக்க பொருட்களை தயா ரிக்கும் தொழில் முனைவோரை அடையாளம் கண்டு, அவர் கள் ஊக்குவிக்கப்படுவர். மேலும், துப்புரவு பணியாளர் களுக்கான சுகாதார முகாம் நடத்தப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மின்தடை அறிவிப்பு
அவிநாசி, ஜூன் 5- நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, 15.வேலம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப் புப் பணிகள் நடைபெறுவதால், திங்களன்று (ஜூன் 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பச்சாம்பாளையம், பரம சிவம்பாளையம், ஸ்ரீராம் நகர், பெரியாயிபாளையம், கே. ஆர்.சி.அமிர்தவர்ஷினி நகர், கே.ஆர்.சி.பிருந்தாவன் நகர், பழைய ஊஞ்சப்பாளையம், புது ஊஞ்சபாளையம், பொங்கு பாளையம், குப்பாண்டம்பாளையம், துலுக்கமுத்தூர், நல் லாத்துப்பாளையம், அய்யம்பாளையம், ஆயிக்கவுண்டம் பாளையம் மற்றும் அம்மாபாளையம் ஒரு பகுதி, ஆத்துப் பாளையம், அனுப்பர்பாளையம், திலகர்நகர், அங்கேரி பாளையம், பெரியார்காலனி, அம்மாபாளையம், அனுப்பர் பாளையம்புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணுநகர், தண்ணீர் பந்தல்காலனி, ஏ.வி.பி.லே அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன்நகர், நேருநகர், குருவாயூரப்பன் நகர், நஞ் சப்பா நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பிச்சம்பாளையம் புதூர், குமரன் காலனி, செட்டிபாளையம், சோளிபாளையம், கருப்பராயன் கோயில் பகுதி, சொர்ணபுரி லே}அவுட், ஜீவா நகர், அன்னபூர்ணா லே அவுட், திருமுருகன்பூண்டி, துரை சாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளை யம், விஜிவி நகர், அணைப்புதூர் மற்றும் டிடிபி மில் அகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என, அவிநாசி மின் வாரிய செயற்பொறியாளர் தீ.விஜயஈஸ்வரன் தெரிவித் ள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் 50 ஊராட்சிகளில் வேளாண் வளர்ச்சி சிறப்பு முகாம்
திருப்பூர், ஜூன் 5- திருப்பூர் மாவட்டத்தில் 50 ஊராட்சிகளில் வேளாண் வளர்ச்சி சிறப்பு முகாம் வரும் ஜூன் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து திருப்பூர் வேளாண் இணை இயக்குனர் மகாதேவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டத்தில் 2021 - 22 ஆம் நிதியாண்டில், 50 ஊராட்சிகளில் வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தன்னிறைவு பெற்ற ஊராட்சிகளாக மாற்றும் நோக்கில் வேளாண் சார்ந்த அனைத்து துறைகள் இணைந்து, வருகிற 7 ஆம் தேதி, 50 ஊராட்சிகளில் தொடர் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அதன்படி, அவிநாசியில் ஆலத்தூர், சேவூர், நம்பியாம்பாளையம், பழங்கரை, பாப்பான்குளம், புதுப்பாளையம், செம்பியநல்லுார். தாராபுரத்தில் பொன்னாபுரம், முண்டுவேலம்பட்டி, தொப்பம்பட்டி. குடிமங்கலத்தில், அணிக்கடவு, குடிமங்கலம், வாகைத்தொழுவு.காங்கயத்தில், நத்தக்காடையூர், பழையகோட்டை, பாப்பினி, பரஞ்சேர் வழி, பொதியம்பாளையம் ஊராட்சி.குண்டடத்தில், எல்லம்பாளையம் புதூர், நந்தவனம்பாளையம், பெருமாள்பாளையம், சடையபாளையம், சங்கரன் டாம்பாளையம், சூரியநல்லுார், வட சின்னேரி பாளையம். மடத் துக்குளத்தில், துங்காவி. மூலனூ ரில் கிழான்குண்டல், கொமார பாளையம், பொன்னிவாடி. பல்லடத்தில், கணபதிபா ளையம், கரைப்புதூர், வடுகபா ளையம்புதூர். பொங்கலூரில் கண் டியன்கோவில், தெ.அவிநாசி பாளையம், தொங்குட்டிபாளையம், உகாயனூர்.திருப்பூரில், முதலிபா ளையம், வள்ளிபுரம்.உடுமலை யில் ஆண்டிய கவுண்டனூர், ஜல்லிப்பட்டி, கல்லாபுரம், ஊத்துக்குளியில் செங்கப்பள்ளி, சின்னேகவுண்டன் வலசு, கமலக்குட்டை, கவுண்டம்பாளை யம், நடுப்பட்டி, சுண்டக்காம் பாளையம், விருமாண்டம்பா ளையம். வெள்ளகோவிலில் பச்சா பாளையம், வேலம்பாளையம் ஊராட்சிகளில் முகாம் நடைபெற உள்ளது. முகாமில், பட்டா மாறுதல், வண்டல் மண் எடுக்க, பயிர்க் கடன் வழங்கல், பயிர் காப்பீடு திட்ட விழிப்புணர்வு, விவசாய கடன் பெற விண்ணப்பம் பெறப் படும். விவசாயிகள், இந்த முகா மில் பங்கேற்று பயன்பெற வேண் டும். இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
திருப்பூர், ஜூன் 5- வெள்ளகோவில், மூல னுார் சாலை, ஈஸ்வரன் கோவில் அருகே துண்டு சீட் டில், கேரள மாநில லாட்டரி டிக்கெட்டின் கடைசி மூன்று எண்களை எழுதி கொடுத்து, விற்பதாக போலீசுக்கு தக வல் கிடைத்தது. அதனை தொடர்ந்து, போலீசார் நடத் திய சோதனையில், அதே பகுதியை சேர்ந்த முனி யாண்டி (32), கோவை சாலை, அறிவொளி நகரை சேர்ந்த கோவிந்தராஜ் (41) ஆகிய இருவரும் சட்டவிரோ தமாக லாட்டரி சீட்டு விற் பனையில் ஈடுபட்டது தெரி யவந்தது. இதனையடும் அவர்களை கைது செய்த போலீசார் 700 ரூபாய் ரொக் கத்தையும் பறிமுதல் செய்த னர்.
அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்
சேலம், ஜூன் 5- கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் சேலம் அரசு இசைப் பள்ளியில் இக்கல்வியாண்டிற் கான மாணவர் சேர்க்கை ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட்டு நடை பெற்று வருகிறது என மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித் துள்ளளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, கலை பண்பாட்டுத் துறையின் கீழ் சேலம் மாவட்ட அரசு இசைப்பள்ளி தளவாய்பட்டி யில் ஆவின் பால் பண்ணை எதிரில் திருப்பதி கவுண்டனூர் சாலையில் உள்ள கலை பண்பாட்டு மைய வளாகத்தில் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் தமிழகத்தின் பாரம் பரிய கலைகளான குரலிசை (பாட்டு), நாதஸ்வரம், தவில், தேவா ரம், பரதநாட்டியம், வயலின், மிரு தங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 13 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேர லாம். பயிற்சி காலம் மூன்று ஆண்டு கள். பயிற்சி முடிவில் தேர்ச்சி பெற்ற வர்களுக்கு அரசு சான்றிதழ் வழங் கப்படுகிறது. பயிற்சிக்கு கட்டணம் இல்லை, சேர்க்கை கட்டணமாக ஆண்டிற்கு ரூ.350 மட்டும் செலுத் தப்பட வேண்டும். மாணவ மாணவி யருக்கு இலவச பேருந்து பய ணச்சலுகை அளிக்கப்படுகிறது. இசைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியருக்கு கல்வி உத வித்தொகையாக மாதம் ரூ.400 வழங் கப்படுகிறது. தமிழகத்தின் அரசு இசைப்பள்ளிகளில் தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க கலைகளை பயி லுவதற்கு உரிய வாய்ப்பினை சேலம் மாவட்டத்தினர் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இசைப்பள்ளியில் சேர்க்கை விண் ணப்பம் பெற தலைமை ஆசிரியர், மாவட்ட அரசு இசைப்பள்ளி, தள வாய்ப்பட்டி-திருப்பதி கவுண்டனூர் சாலை, அய்யம்பெருமாம்பட்டி அஞ் சல், சேலம் - 636 302 எனும் முகவரி யில் நேரிலோ அல்லது சுயமுகவரி யிட்ட அஞ்சல் உறை இணைத்து அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0427-2906197 மற்றும் 75026 11005 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை
ஈரோடு, ஜூன் 5- ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து சூரம் பட்டி மின்பாதையில் பராம ரிப்பு பணிகள் நடைபெற உள் ளது. இதனால், திங்களன்று (இன்று) உழவன் நகர், பெரி யார் சாலை, மாரப்பா முதல் வீதியில் இருந்து 3 ஆவது வீதி வரையும், ஜெகநாத புரம் காலனி முதல் வீதியிலி ருந்து 5 ஆவது வீதி வரையும், எஸ்.கே.சி. மெயின் ரோடு, கிராமடை முதல் வீதியிலி ருந்து 7 ஆவது வீதி வரையும், மாகாளியம்மன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதி யம் 1 மணி வரை மின் விநி யோகம் இருக்காது என தெரி விக்கப்பட்டுள்ளது.