சேலம், ஆக.1- மக்களவையில் ராகுல் காந்தியை சாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசிய அமைச்சரைக் கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மக்களவையில் ராகுல் காந்தி பேசியபோது, பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் அனுராக் தாகூர், ‘சாதி பெயர் தெரியாதவர்கள் சாதி கணக்கெடுப்பு பற்றி பேசுகிறார்கள்’ என்று தரம் தாழ்ந்து பேசினார். மேலும், அந்த பதிவினை பிரதமர் மோடி கேவலமான புத்தியால் ரசித்து அனைவ ரும் பார்க்க வேண்டிய பதிவு என்று தமது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த தரமற்ற போக்கினை கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் காங்கிரஸ் கட்சியி னர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இதில் அக்கட்சியின் சேலம் மாநகர் மாவட்டத் தலைவர் பாஸ்கரன், மாநில நிர்வா கிகள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாமன்ற துணை மேயர் சாராதாதேவி உட் பட திரளானோர் கலந்து கொண்டனர்.