districts

img

அமைதி வேண்டி சர்வ சமய பிரார்த்தனை

கோவை, அக்.31- கோவையில் அமைதியை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார் பில் சர்வ சமய பிரார்த்தனை நடை பெற்றது. இதில் அனைத்து மதத் தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி நினைவு தினத்தை முன்னிட்டு  கோவை மாநகர மாவட்ட காங்கி ரஸ் கமிட்டி சார்பாக, “கோவையில் அமைதி வேண்டும்” என்பதை வலியுறுத்தி  மத நல்லி ணக்க சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது. கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின்  அலு வலகமான காமராஜர்  பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அகில இந்திய  காங்கி ரஸ் கட்சியின் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமை தாங்கினார். சர்வ சமய பிரார்த்தனையில் இந்து, கிறிஸ்துவ மற் றும் இஸ்லாமிய மத போதகர்கள் கலந்து கொண்டனர். அவரவர் மத முறைப்படி வழி பாடு நடத்தினர். தொடர்ந்து அனைத்து மதத் தினரும் இணைந்து சமாதானத்தை வலியு றுத்தி வெண்புறாவை பறக்க விட்டனர்.