districts

img

பாதுகாப்புத்துறை ஊழியர்களிடம் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

அம்பத்தூர், ஏப்.17- திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் ஆவடி பாது காப்புத்துறை ஊழியர்களிடம் செவ்வா யன்று வாக்கு சேகரித்தார். இந்தியா கூட்டணி வேட்பாளர் சசிகாந்த்  செந்தில், ஆவடி டேங்க் பேக்டரி தொழிற் சாலை, படைத்துறை  உடைத் தொழிற்சாலை  ஆகிய இரு பாதுகாப்புத் துறை நிறுவனங் களில் பணியாற்றும் ஊழியர்களிடம் வாக்கு  சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ஆவடி யில் இயங்கி வரும் பாதுகாப்புத் துறை  நிறுவனங்கள் தனியார் மையம் ஆக்கப் படாது. ஆவடியில் விசா, கடவுச்சீட்டு பெற  கிளை அலுவலகம் அமைக்கப்படும். மெட்ரோ ரயில் திட்டம் ஆவடியில் இருந்து திருநின்றவூர் வரை நீடிக்கப்படும். ஆவடி ரயில் நிலையத்திற்கு வரும் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆட்டோமொபைல் தொழிற் சாலைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி ஊக்குவிக்கப்படும் என்றார். இந்த பிரச்சாரத்தில் திமுக மாவட்டச் செயலாளர் சா.மு.நாசர் எம்எல்ஏ, அகில இந்திய பாதுகாப்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி.ஸ்ரீகுமார், மேயர் கு.உதயகுமார், திமுக நிர்வாகிகள் கே.ஜெ.ரமேஷ்,  சண்.பிரகாஷ்,  ஜி.ராஜேந்திரன், பேபி சேகர், காங்கிரஸ் நிர்வாகிகள் ஏ.ஜி.சிதம்பரம், ஆர்.எம்.தாஸ்,  இ.யுவராஜ், எஸ்.சிவகுமார், தொழிற்சங்க நிர்வாகிகள் முகம்மது மீரா, நாகூர்கனி, க.விஜயசீலன், குமார், மோகன், ரவிக்குமார்,  கிருபானந்தம், முரளி உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.