தருமபுரி, ஜூன் 9- பல்கலைக் கழகம் அளவில் சதுங்க போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு தருமபுரி அரசு கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். தருமபுரி அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த வி.புஷ்பா , ஜி.ராதிகா ஆகிய இரு மாணவிகள் சேலம், பெரியார் பல் கலைக்கழக சதுரங்க மகளிர் அணிக்காக தேர்வு செய்யப் பட்டனர். இவர்கள் பெங்களூரு ரேவா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தென் மண்டல பல்கலைக் கழகங்களுக்கு இடை யிலான சதுரங்க போட்டியில் பங்கேற்று பல்கலைக்கழ கத்துக்கும் தருமபுரி அரசு கலைக் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளனர். 2022-23 ஆம் கல்வியாண்டில் சதுரங்க போட்டிகளில் குழு முதன்மையாளர் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்ற மாணவிகளுக்கு சேலம் பெரியார் பல் கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட வெற்றிக் கோப்பை வழங்கி விளையாட்டு வீராங்கனைகளுக்கு, கல்லூரியின் முதல்வர் முனைவர் ப.கி. கிள்ளிவளவன் வாழ்த்து தெரிவித்தார். மேலும், கடந்த ஆறு ஆண்டுகளாக பல்வேறு தடகள மட்டும் குழு விளையாட்டு போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உடற்கல்வி இயக்குநர் முனைவர் கு.பாலமுருகன் கல்லூரி முதல்வர் உள்ளிட் டோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.