districts

img

சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு

அன்னூர்,ஏப்.7- அன்னூரில் சாலையில் கிடந்த 20 ஆயிரம் ரூபாய்  பணத்தை, காவல்நிலையத்தில் ஒப்படைத்தவ ருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அன்னூர் பகுதியைச் சேர்ந்த அர்ஷத் என்பவர் அவினாசி  சாலையில் அமைந்துள்ள பழக்கடையில் வேலை செய்து  வருகிறார். இந்நிலையில் புதனன்று காலையில் வேலைக்கு  செல்லும் வழியில், சாலையில் 20 கிடந்த ஆயிரம் ரூபாய் பணத்தை கண்டெடுத்துள்ளார். இதுகுறித்து வாலிபர் சங்க நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து  அர்ஷத் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அன்னூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் முகமது  முசிர், மணிகண்டன்உள்ளிட்டோர் அன்னூர் காவல் நிலைய  காவல் ஆய்வாளரிடம் இப்பணத்தை ஒப்படைத்தனர். இதையடுத்து காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் அர்ஷத் திற்கு வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்தனர்.