districts

img

சத்தீஸ்கர் பிரதிநிதிகளுக்கு சேலத்தில் வரவேற்பு

சேலம், செப்.17- நாமக்கல்லில் நடைபெற உள்ள ஆதிவாசிகள் உரி மைகளுக்கான தேசிய அமைப்பின் அகில இந்திய மாநாட்டிற்கு சத்தீஸ்கர் மாநி லத்திலிருந்து வந்த பிரதிநிதி களுக்கு சேலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆதிவாசிகள் உரிமை களுக்கான தேசிய அமைப்பின் அகில இந் திய மாநாடு செப்.19 (நாளை) துவங்கி 21 ஆம் தேதியன்று வரை நாமக்கல்லில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பங்கேற் பதற்காக இந்தியா முழுவதுமிருந்து ஆதி வாசி மக்கள் நாமக்கல்லை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். அதன்ஒருபகுதியாக சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து கேரள  விரைவு ரயிலில் மாநாட்டு பிரதிநிதிகள் சேலம் வந்த னர். அவர்களுக்கு அகில இந்திய விவசாயி கள் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு விவசாயிகள் சங்க அகில இந்திய இணைச்செயலாளர் டி.ரவீந்தி ரன் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்டத் தலைவர் ஏ.அன்பழ கன், மாவட்ட துணைத்தலைவர் பி.தங்க வேலு, சிபிஎம் சேலம் வடக்கு மாநகரச் செய லாளர் என்.பிரவீன்குமார், பால் உற்பத்தி யாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர்  பி.அரியாக்கவுண்டர் உட்பட பலர் கலந்து  கொண்டனர். மேலும், மாநாட்டு பிரதிநிதிகளை சேலம் ஜங்ஷனில் வரவேற்று வாழ்த்தி முழக்க மிட்டு, நாமக்கல் மாநாட்டுக்கு அனுப்பி வைத் தனர்.