உடுமலை, நவ.18- சுதந்திரப் போராட்ட வீரர் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் சங்கரய்யாவின் மறைவையொட்டி உடுமலை, ஊத்துக்குளி, குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் இரங்கல் கூட்டம் நடைபெற் றது. சுதந்திரப் போராட்ட வீரர் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் சங்கரய்யாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உடுமலை நகராட்சி அலுவலகத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வரை இரங்கல் பேரணியில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்க ளும் கலந்து கொண்டனர். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகரச் செயலாளர் தண்டபாணி தலைமையில் உடுமலை மத்திய பேருந்து நிலையத்தின் முன்பு புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இதில், திமுக உடுமலை நகரச் செயலாளர் சி. வேலுசாமி, அதிமுக ஒன்றியச் செயலாளர் முரு கேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உடு மலை தாலூக்கா செயலாளர் செளந்தர்ரா ஜன், நிர்வாகிகள் சி. சுப்பிரமணியம், என். கிருஷ்ணசாமி, ரணதேவ், காங்கிரஸ் கட்சி யின் சார்பில் முருகன், பாட்டாளி மக்கள் கட்சி யின் சார்பில் பிரபாகரன், தமிழ் மாநில காங்கி ரஸ் கட்சியின் சார்பில் பாலு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டச் செயலாளர் சிவசங்கர், திராவிடர் கழகத்தின் சார்பில் தம்பி பிரபாகரன், ஆதிதமிழர் பேரவையின் சார்பில் பெரியார் தாசன், எம்.ஜி.ஆர் மக்கள் மன்றத்தின் சார்பில் சாகுல் அமிது, பகுஜன் சமாஜ் கட்சியின் உடுமலை தொகுதி செயலா ளர் பெஞ்சமீன் கிருபாகரன், தமிழ்நாடு முஸ் லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அப்துல் கயம், அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செய லாளர் அம்சராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.மதுசூதணன், மாவட்டக்குழு உறுப் பினர்கள் அ.பஞ்சலிங்கம், கி.கனகராஜ் என். சசிகலா சிஐடியு மாவட்டத் துணை செய லாளர் ஜெகதீசன், விவசாயச் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் பாலதண்டபாணி, உடுக் கம்பாளையம் பரமசிவம், அருள்பிரகாஷ் உட்பட திரளானோர் கலந்து கொண்டு புக ழஞ்சலி செலுத்தினர்.
ஊத்துக்குளி:
தோழர் சங்கரய்யாவின் மறைவை யொட்டி ஊத்துக்குளி ஆர்.எஸ்.ல் அனைத்து கட்சிகள் சார்பில் இரங்கல் ஊர்வலம் மற்றும் அஞ்சலி கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுக்கா செய லாளர் எஸ்.கே.கொளந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திமுக தெற்கு ஒன் றியச் செயலாளர் பி.பி.ஈஸ்வரமூர்த்தி, நகரச் செயலாளர் கே.கே.ராசுக்குட்டி, அதிமுக நக ரச் செயலாளர் வி.கே.சின்னசாமி, சிபிஐ தாலுக்கா செயலாளர் வி.ஏ.சரவணன், காங்கி ரஸ் மாவட்டச் செயலாளர் எம்.சி.எஸ். மனோஜ்குமார், மதிமுக ஒன்றியச் செயலாளர் வி.சுந்தர் ராஜு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட் டச் செயலாளர் கே.சரஸ்வதி ஆகியோர் சங்க ரய்யா குறித்து பேசினர். இதில் பல்வேறு கட்சி களை சேர்ந்த தலைவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
குன்னத்தூர்:
அதேபோல குன்னத்தூர் பேருந்து நிலை யத்தில் தோழர் சங்கரய்யாவின் மறைவை யொட்டி வியாழனன்று குன்னத்தூர் நகரச் செயலாளர் பி.சின்னசாமி தலைமையில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குமார், தாலுக்கா குழு உறுப்பினர் மணியன், ஆசிரி யர் ஜார்ஜ் ஐயா, சிஐடியு வீராசாமி, திமுக நக ரச் செயலாளர் சென்னியப்பன் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.