districts

img

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

உடுமலை, மார்ச் 17- சமையல் எரிவாயு விலை உயர்வை கண் டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங் கத்தினர் வியாழனன்று உடுமலை மத்திய பேருந்து நிலையத்தின் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். மாதர் சங்கத்தின் உடுமலை நகரக்குழு செயலாளர் சித்ரா தலைமையில் நடைபெற்ற  இந்த ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய பாஜக அரசு  தொடர்ந்து மக்கள் விரோதமாக செயல்பட்டு  வருவதால் ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந் துள்ளது. இந்நிலையில், மீண்டும் சமையல் எரிவாயு உருளை விலை உயர்த்தப்பட்டுள் ளது. இதை திரும்பப்பெற வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாவட்ட செயலாளர் கு.சரஸ்வதி,  மாவட்ட பொருளாளர் ஆர்.கவிதா, மாற்றுத்  திறனாளிகள் சங்க தலைவர் மாலினி, குடிமங் கலம் ஒன்றிய செயலாளர் கலைவாணி, குடி மங்கலம் ஒன்றிய துணை செயலாளர் என்.சசி கலா, மடத்துக்குளம் தாலுகா செயலாளர் ராதா, உடுமலை ஒன்றிய குழு செயலாளர் சித்ரா, முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் வசந்தி மற்றும் உடுமலை நகர தலைவர்  சுமதி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.