தாராபுரம், மார்ச் 29 - ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்தும், ஜனநாயகத்தை அழிக்க முயலும் அதன் சீர்குலைவு நடவடிக்கைகளை எதிர்த்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெருமுனை பிரச்சார இயக்கம் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, தாராபுரம், அவிநாசி பகு திகளில் நடைபெற்றது. தாராபுரத்தில் அண்ணா சிலை, வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு சிபிஎம் தாலுகா செயலாளர் என்.கன கராஜ் தலைமை வகித்தார். இதில் கட்சி தாலுகாக்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கட்ராமன், பி.பொன்னுச் சாமி, மேகவர்ணன், கண்ணுசாமி, கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். அவிநாசி அவிநாசியில் சேவூர் சாலை, மங் கலம் சாலை, அம்மாபாளையம், வஞ் சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சியின் தெருமுனை மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் நந்தகோபால், மாவட் டக்குழு உறுப்பினர்கள் வெங்க டாசலம், பழனிச்சாமி, சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சம்மேள னம் மாநிலத் தலைவர் முத்துசாமி, ஒன் றிய குழு உறுப்பினர்கள் வேலுச் சாமி, சண்முகம், பாலசுப்பிரமணி, ராஜ், முருகன், மோகனசுந்தரம், தேவி, பழனிச்சாமி, நகர்மன்ற உறுப் பினர்கள், கிளைச் செயலாளர் உட் பட பலர் கலந்து கொண்டனர். உடுமலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மடத்துக்குளம் தாலுகாக்குழு சார்பில் செவ்வாயன்று, கும்பம்பா ளையம், கொழுமம், கிழக்கு குமர லிங்கம், சாமராயபட்டி,ஜெ.ஜெ நகர், பெருமாள்புதூர் மற்றும் கொமரலிங் கம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தாலுகா குழு உறுப்பினர் ஆறு முகம் தலைமையில் நடைபெற்ற இந்த தெருமுனை கூட்டத்தில், தாலுகாக்குழு உறுப்பினர் எம்.எம். வீரப்பன் கண்டன உரையாற்றினார். தாலுகா செயலாளர் ஆர்.வி.வடி வேல் நிறைவுரையாற்றினார். இதில், தாலுகாக்குழு உறுப்பினர்கள் ராஜ ரத்தினம், பன்னீர்செல்வம், ஈஸ்வ ரன், ராதா, வேடபட்டி ஈஸ்வரன், செந்தில் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.