மலைவாழ் மக்களின் பாரம்பரிய உரிமையை பறிப்பு
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கண்டனம்
உடுமலை, ஏப். 2- உடுமலை அருகே உள்ள பஞ்ச லிங்க அருவிக்கு செல்லும் கட்டணம் வசூல் செய்யும் உரி மையை மலைவாழ் மக்களிட மிருந்து பறிப்பதற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள திருமூர்த்தி மலை அடிவார பகுதி யில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலி ருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பஞ்சலிங்க அருவி. இந்த அருவி செயற்கை யாக உருவாக்கப்பட்டது. இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்து குளித்துவிட்டு செல்வார்கள். இதில், வனத்துறை மூலம் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், கட்டணம் வசூல் செய்யும் உரிமையை மலைவாழ் மக்களுக்குதான் வழங்கப்பட வேண்டுமென மலைவாழ் மக்கள் சங்கம் போராடியது. இதனால், அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணத்தை பல வருடங்களாக மலைவாழ் மக்கள் வசூலித்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கொரோனா தடுப்பு நடவடிக்கையின் போது பஞ்சலிங்க அருவி மூடப்பட்டது. பின்னர், அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப் பட்டனர். ஆனால், கட்டணம் வசூல் செய்யும் உரிமையை மலைவாழ் மக்களுக்கு வழங்காமல், கோவில் நிர்வாகமே அருவி பராமரிப்பு கட்டணம் என்ற பெயரில் வசூ லித்து வருகிறது. மலைவாழ் மக்கள் பல தலைமுறைகள் இந்த மலையை நம்பியே வாழ்ந்து வரு கிறார்கள். கடந்த 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி மலைவாழ் மக்களுக்கு அருகில் உள்ள கோவில் வருமானத்தில் பத்து சத விகிதம் பயன்படுத்த வேண்டும். கோவில் மற்றும் மலை பாதை களை பராமரிக்க மலைவாழ் மக்களை பயன்படுத்த வேண்டும். ஆனால், கோவில் நிர்வாகம் படிப் படியாக மலைவாழ் மக்களின் உரிமைகளை பறித்து வருகிறது. மேலும்,திருமூர்த்தி மலை கோவில் பகுதியில் உள்ள கடை கள், பூங்கா, நீச்சல் குளம், படகுத் துறை ஆகியவற்றை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவு எடுக்கப்பட் டுள்ளது. எனவே, மலைவாழ் மக்களின் பாரம்பரிய உரிமையை மீட்கவும், திருமூர்த்தி கோவில் நிர்வாகத்தின் தனியார்மய நடவடிக்கையை உடனே தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டு மென தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள் ளனர்.
ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு
பள்ளிபாளையம், ஏப்.2- குமாரபாளையம் ஜல்லிக்கட்டு போட்டி ஞாயிறன்று நடைபெறவிருந்த நிலையில், தற்காலிகமாக ஒத்திவைக் கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் - சேலம் நெஞ் சாலையில் அமைந்துள்ள, தனியார் கல்லூரி பின்புறம் குமாரபாளையம் ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியானது, ஞாயிறன்று (நேற்று) நடை பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான முன்னேற் பாடு பணிகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், சனியன்று ஜல்லிக்கட்டு பேரவையின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தவிர்க்க முடியாத காரணங்களால் திட்டமிட்டபடி நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படு வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியானது ஜல்லிக் கட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே ஏமாற் றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேளாண் அடுக்கு திட்டத்தில் சேர அழைப்பு
உடுமலை, ஏப்.2- வேளாண் அடுக்கு திட்டத்தில் சேர உடுமலை, மடத்துக் குளம் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேளாண் அடுக்ககம் (Agri Stack) ஒன்றிய அரசின் திட்ட மாகும். இத்திட்டத்தில் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக் குளம் வட்டார விவசாயிகள் இணைய வேளாண்துறை சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, விவ சாய நிலத்திற்கான சிட்டா, ஆதார் எண், புகைப்படம், குடும்ப அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் நகலினை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் வசம் ஒப்படைத்து பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். மேலும், திங்கட்கிழமை முதல் இந்த பணியினை பத்து நாட்களுக்குள் முடிவடைக்க வேண்டும் என்பதால் விவசாயி கள் உடனடியாக ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
கோவை, ஏப்.2- கோவையில் வாலிபரை தாக்கிய 3 பேரை காவல் துறை யினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர். கோவை, கரும்புக்கடை அருகே உள்ள ஆசாத் நகரை சேர்ந்தவர் சதாம் ஹூசைன் (29). இவர் காந்திபுரத்தில் உள்ள செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பரின் உறவுக்கார பெண் ஒருவருக்கும், கரும்புக்கடை அண்ணா காலனியைச் சேர்ந்த முகமத் ஆசாத் (28) என்பவ ருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த சதாம் ஹூசைன், அந்த பெண்ணுடன் உள்ள பழக் கத்தை கைவிடுமாறு அவரை கண்டித்துள்ளார். ஆனால், முகமத் ஆசாத் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்துள் ளார். இந்நிலையில், சதாம் உசேன் உக்கடம் - சுங்கம் சாலையி லுள்ள ஒரு பேக்கரி அருகே நின்று கொண்டிருந்தார். அப் போது அங்கு காரில் வந்த முகமத் ஆசாத் உட்பட 3 பேர் கொண்ட கும்பல், சதாம் உசேனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதில், வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி, சதாம் ஹூசைனை தாக்கினர். இதுகுறித்து சதாம் ஹூசைன் உக்கடம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கரும்புக்கடை, அண்ணா காலனியைச் சேர்ந்த முகமத் ஆசாத் (28), போத்தனூர் - நஞ்சுண்டாபுரம் சாலையைச் சேர்ந்த லியோ ஜோசப் (32), குறிச்சி பிரிவைச் சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணா (32) ஆகிய 3 பேரை கைது செய் தனர். இதன்பின் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு, 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
காவலர் மீது தாக்குதல்: 2 பேருக்கு சிறை
கோவை, ஏப்.2- குடிபோதையில் காவலர் ஒருவரை கீழே தள்ளிவிட்ட 2 பேரை காவல் துறையினர் கைது செய்து, சிறையில் அடைத் தனர். கோவை, ரத்தினபுரி காவல் துறையினர் சங்கனூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சில வாலிபர்கள் குடி போதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதை யடுத்து காவல் துறையினர் அவர்களை எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறிவிட்டு புறப்பட்டு சென்றனர். சிறிது நேரம் கழித்து அதேபகுதிக்கு வந்த போலீசார், அதே வாலிபர்கள் மீண்டும் தகராறு செய்து கொண்டிருந்தனர். இதனை காவலர் ஒருவர் கண்டித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த வாலி பர்கள், காவலரை தகாத வார்த்தைகளால் பேசி அவரை கீழே தள்ளிவிட்டனர். இச்சம்பவம் குறித்து ரத்தினபுரி காவல் துறையினர் மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அதில், குடிபோதையில் போலீசாரை தாக்கியது சிவா னந்தா காலனியைச் சேர்ந்த மணி (27) மற்றும் அவரது சகோதரர் விஷ்ணு (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து, நீதி மன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
நாய் கடித்து மான் மரணம்
ஈரோடு, ஏப்.2- ஈரோடு அருகே நாய் கடித்து மான் சம்பவயிடத்திலேயே மரணமடைந்தது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை முருகன் கோவில் வனப்பகுதி சுமார் 1700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த வனப்பகுதியில் ஏராளமான மான்கள் உள்ளன. தற்போது வறட்சி நிலவுவதால் இந்த மான்களுக்கு வனத்துறை சார்பில் ஆங்காங்கே தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், சில மான்கள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து அருகில் உள்ள தோட்டங்களுக்கு தண்ணீரைத் தேடி சென்று வருகின்றன. இந்நிலையில், வனப்பகுதியில் இருந்து சுமார் 5 வயது டைய ஒரு ஆண் மான் தண்ணீர் தேடி அங்குள்ள தோட்டத் துக்கு சென்றுள்ளது. அப்போது அங்கு சுற்றி திரிந்த நாய் ஒன்று மானை துரத்தி கடித்து குதறியது. இதில் மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இத்தகவ லறிந்த சென்னிமலை வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சென்னிமலை கால்நடை மருத்துவர் சு.விஜயகுமார் இறந்த மானை பிரேத பரிசோ தனை செய்தார். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்குள்ள வனப்பகுதியில் மானை குழி தோண்டி புதைத் தனர்.
உதகையில் துவங்கிய குதிரை பந்தயம்
உதகை, ஏப்.2- நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் கோடை சீசனின்போது சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்களை கவரும் வகையில் மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப் படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக ஏப். 14 ஆம் தேதியன்று (தமிழ் புத்தாண்டு) முதல் ஜூன் மாதம் வரை மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் உதகையில் குதிரை பந்தயம் நடத் தப்பட்டு வந்தது. ஆனால், கடந்தாண்டு தொடர் மழை காரணமாக அனைத்து போட்டிகளும் நடத்த முடியாமல் போனதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனவே, நடப்பாண் டில் முன்கூட்டியே போட்டியை நடத்த திட்ட மிடப்பட்டது. இதன்படி ஏப்.1 ஆம் தேதியே போட்டியை தொடங்க முடிவு செய்து தேவை யான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதன்படி, நடப்பாண்டில் 136 ஆவது குதிரை பந்தயம் உதகையில் சனியன்று தொடங்கியது. முதல் நாளில் 8 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது. பந்தயங்களில் பங் கேற்ற குதிரைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின. முதல் போட்டியில் சாண்டாமரினா ஸ்டார் குதிரை வெற்றி பெற்றது. நீலகிரி முனிசிபாலிட் கோப்பைக் கான போட்டியில் 10 குதிரைகள் பங்கேற்றன. இதில், ராயல் ஐகான் குதிரை வெற்றி பெற்றது. குதிரையின் உரிமையாளர் எம்.ஏ.எம்.ராமசாமி அறக்கட்டளைக்கு ரூ.3 லட்சத்து 71 ஆயிரத்து 250, பயிற்சியாளர் பி.சுரேஷூக்கு ரூ.45 ஆயிரம் மற்றும் ஜாக்கி சி.உமேஷூக்கு ரூ.33,750 பரிசுத்தொகை மற்றும் கோப்பை வழங்கப்பட்டது. உதகை நகராட்சி ஆணையர் காந்திராஜன் வெற்றி பெற்ற குதிரை பயிற்சியாளர் மற்றும் ஜாக்கிக்கு கோப்பையை வழங்கினார். இதனிடையே போட்டியின் போது திடீரென கோடை மழை பெய்ய தொடங்கியது. மழை காரணமாக வெல்கம் கோப்பைக்கான 7 மற்றும் 8 ஆம் போட்டி கள் ரத்து செய்யப்பட்டன. போட்டிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். மேலும், செல்போன் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதி விட்டு மகிழ்ச்சியடைந்தனர்.
ஓய்வூதியம் பெற ஆயுள் சான்று அவசியம்
ஈரோடு, ஏப்.2- கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்கள் மூலம் ஓய்வூ தியம் பெறுவோர் ஆயுள் சான்று ஆன்லைன் மூலம் அளிக்க வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட 18 தொழிலாளர் நலவாரியங் களில் பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் போன்ற அனைத்து விண்ணப்பங்களும் tnuwwb.tn.gov.in என்ற தொழிலாளர் துறை இணையதளம் வாயிலாக பெறப்படுகிறது. இந்நலவாரியங்களின் மூலம் 60 வயது நிறைவடைந்த 7 ஆயிரத்து 200க்கும் மேற் பட்டோர் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இவர்கள் ஆயுள் சான்றை இணைய வழியில் ஏப்.30 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். https://tnuwwb.tn.gov.in/applicationlives/applicationlive என்ற இணையதள முகவரி யில் ஆதார் அட்டை, ரேசன் கார்டு, ஓய்வூதிய உத்தரவு நகல், புகைப்படம்–1, வங்கி புத்தக நகல், நடப்பு மாதம் வரை வரவு – செலவு பரி வர்த்தனை விபரம் ஆகியவற்றை அத்துடன் பதிவேற்ற வேண்டும். மேலும், விபரங்களுக்கு 0424-2275591, 2275592 அல்லது losserode@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகை பறிப்பு
கோவை, ஏப்.2- கோவையில் மூதாட்டி யிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற நபரை காவல் துறையினர் தேடி வரு கின்றனர். கோவை, சாய்பாபா காலனி அருகே உள்ள நாரா யண குரு சாலையைச் சேர்ந்தவர் மல்லிகா (65). இவர் அப்பகுதியிலுள்ள கடைக்கு காய்கறி வாங்கு வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென மூதாட்டியின் கழுத்திலிருந்த 5 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த மல்லிகா சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற நபரை தேடி வருகின்றனர்.
அணை நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:48.76/60அடி நீர்வரத்து:644கன அடி வெளியேற்றம்:1124கன அடி அமராவதி அணை நீர்மட்டம்:52.79/90அடி. நீர்வரத்து:231கனஅடி வெளியேற்றம்:14கன அடி
கால்வாய் கரையில் தார்ச்சாலை அமைக்க கோரிக்கை
உடுமலை, ஏப்.2- போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கால் வாய் கரையில், தார்ச்சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து விவசாய பயன்பாட்டிற்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாய்கரையின் இரண்டு புறங்களிலும் பொது பணித்துறையினர் பயன்படுத்தும் வகையில் மண்ணை சமப்படுத்தி சாலை அமைத்துள்ளனர். இச்சாலையில் சிறிய ரக வாகனங்கள் மட்டுமே பயணித்து வந்தன. இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு உடு மலை அரசு கலைக்கல்லூரி முதல் பெரிய கோட்டை பகுதி யில் இருக்கும் பழனி தேசிய நெடுச்சாலை வரை பொது மக்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பயன்படுத்தும் வகை யில் வாய்க்கால் கரையின் ஒரு பகுதியை தார்ச்சாலையாக மாற்றப்பட்டு அனைவரும் பயன்படுத்தி வந்தனர். இதேபோல், மூணார் சாலையில் இருக்கும் பள்ளிபாளை யம் ஊராட்சி பகுதியில் இருந்து உடுமலை அரசு கலைக் கல்லூரி வரை உள்ள கால்வாய் கரையை தார்ச்சாலை அமைக்க வேண்டுமென பல முறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், மாவட்ட நிர்வாகம், பொதுப்பணி துறை யினரும் செவிசாய்க்காமல் உள்ளனர். இதனால் உடுமலை நகரம், அரசு கலைகல்லூரி, வட்டார போக்குவரத்து அலுவலகம், கோட்டாச்சியர் அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி கல்லூரிகளுக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் உள்ளன. எனவே உடு மலை - மூணாறு சாலையில் போக்குவரத்து நெரிசல் குறைப்ப தற்கு, கரைப்பகுதியில் தார்ச்சாலை அமைக்க மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிநீர் தொட்டியில் சிறுநீர் கழித்த நபர்கள்
தருமபுரி, ஏப்.2- நல்லம்பள்ளி அருகே மேல்நிலை நீர் தேக்க குடிநீர் தொட்டியில் சிறுநீர் கழித்த நபர் கள் குறித்து போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள சிவாடி கிராமம். இக்கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒகே னக்கல் மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டி உள்ளது. இதன் மூலம் சிவாடி காலனி, கந்துக்கால்பட்டி, ராமாயன சின்னஅள்ளி, சிவாடி உள்ளிட்ட 5 கிராம பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலை யில், வியாழனன்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் கஞ்சா போதையில் குடிநீர் தொட்டி உள்ள பகுதிக்கு வந்ததாக தெரிகிறது. பின்னர் அவர்கள் குடிநீர் தொட்டி யின் மேற்பகுதிக்கு செல்லும் தடுப்பு பாதை வழி பூட்டை உடைத்து தொட்டியின் மேற் பகுதியில் ஏறினர். பின்னர் அவர்கள் போதை யில் குடிநீரை மாசுப்படுத்தும் வகையில் தொட்டியின் மூடியை திறந்தும், வாந்தி எடுத்தும், சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த சிலர் இதனை பார்த்து சத்தம் போட்டனர். இதையடுத்து அவர்கள் குடிநீர் தொட்டி யில் இருந்து கீழே இறங்கி அங்கிருந்து ஓடி விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பர வியது. இது குறித்து தகவலறிந்து சனியன்று காலை வருவாய்த்துறை அதிகாரிகள், போலீ சார் அங்கு சென்று மேல்நிலை நீர்தேக்க குடி நீர் தொட்டியை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், சிறுநீர் கழித்ததாக கூறப்படும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்த தண்ணீரை அதிகாரிகள் வெளியேற்றினர். இதையடுத்து குடிநீர் தொட்டி தண்ணீரை அசுத்தப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சிவாடி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், ஊர் பொதுமக்கள் தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்ப வம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.213 லட்சம் மதிப்பில் வாரச்சந்தை அமைத்தல்
தருமபுரி, ஏப்.2- காரிமங்கலத்தில் ரூ.288 லட்சம் மதிப் பீட்டில் புதிய பணிகளுக்கான கட்டிட பணி களை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூ ராட்சிக்குட்பட்ட வாரச்சந்தையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2022-2023-ன் கீழ் ரூ.213 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஞாயி றன்று துவக்கி வைத்தார். இந்த வாரச்சந்தை யில் 80 எண்ணிக்கையில் திறந்த வெளி கடைகள், ஆண் மற்றும் பெண்களுக்கான பொதுக்கழிப்பிடம், 322 மீ சுற்றுசுவர், 200 மீ பேவர் பிளாக் சாலை உள்ளிட்ட திட்ட பணி கள் துவங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வருவாய்த்துறையின் சார்பில் 22 பயனாளி களுக்கு ரூ.18.25 லட்சம் மதிப்பில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் கைகளும், சமூகநலத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.4.82 மதிப்பில் திருமண நிதியுதவிகளும் என மொத்தம் 27 பயனாளி களுக்கு ரூ.23.06 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி. சாந்தி, காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம்.பெ.சுப்பிரமணி, முன் னாள் அமைச்சர் பி.பழனியப்பன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ர.குருராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளி காவலாளி கொலை: 3 பேர் கைது
பள்ளிபாளையம், ஏப்.2- பள்ளிபாளையம் அருகே அரசு பள்ளி காவலாளி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். வஉசி நகர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் காவலாளியாக நடராஜ் (75) என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த வியாழனன்று அதிகாலை ரத்த காயங்களுடன், பள்ளி வளாக பகுதியில் நடராஜ் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த பள்ளிபாளையம் போலீசார் பிரேதத்தை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், காவேரி ஆர்.எஸ் பகுதியைச் சேர்ந்த பிரபு ராம் (19), மணிகண்டன் (21), மாணிக்கம் (21) ஆகிய மூவரும் காவலாளியை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், மேற்கண்ட 3 பேரும் பள்ளியில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த பள்ளியின் காவலாளி நடராஜ், “இங்கு ஏன் மது அருந்துகிறீர்கள்” என திட்டி, அவர்களை வெளியேறுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மூவரும் கட்டிலில் படுத்திருந்த, நடராஜை தலையணையால் அழுத்தி, கழுத்தை நெரித்து, கல்லால் நெஞ்சு பகுதி தாக்கி கொலை செய்துவிட்டு வீட்டிற்கு சென்று விட்டன. தொடர்ச்சியாக பள்ளி வளாகப்பகுதியில் மது அருந்தும் நபர்கள் குறித்து விவரங்களை சேகரிக்கும் போது இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூவரும் கொலை நடந்த நாளன்று பள்ளி வளாகப்பகுதியில் மது அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அதனடிப்படையில் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரும் குமாரபாளையம் மாஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மகாவீர் ஜெயந்தி
ஈரோடு, ஏப்.2- மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு செவ்வாயன்று (நாளை) ஈரோடு மாவட்டத் தில் மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண் டும் என அரசு உத்தரவிட்டுள் ளது. எனவே, மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மது பானக் கடைகள் அதனுடன் இயங்கும் பார்கள், கிளப்கள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள பார்கள் மூடப்பட்டி ருக்கும். அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடு வோர் மீது கடுமையான நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்று மாவட்ட நிர்வா கம் எச்சரிக்கை விடுத்துள் ளது.
சாலை விபத்தில் மாணவர் உயிரிழப்பு
பள்ளிபாளையம், ஏப்.2- ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், திருப்பதி அர்பன் பகுதியைச் சேர்ந்த மோடன் வெங்கிட்டு என்பவரின் மகன் மோடன் கிரண் (25). இவர் அதேபகுதியில் உள்ள ஒரு கல்லூரி யில் இறுதியாண்டு படித்து வந்தார். இந்நிலையில், அவ ருடைய நண்பரான திருப்பதி, அசோக் நகரை சேர்ந்த விஜய பிரதாப் ரெட்டி (25) என்பவருடன், திருப்பதியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கேரளா மாநிலத்திற்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலை யில் புலவர்பாளையம் சர்வீஸ் நிலையம் அருகே சென்ற போது, திடீரென வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளா னது. இதில், மோடன் கிரண் சம்பவ இடத்திலயே உயிரி ழந்தார். படுகாயமடைந்த விஜயபிரதா ரெட்டி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதுகுறித்து நாமக்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாலிபர் கொலை: போலீசார் விசாரணை
கோவை, ஏப்.2- கோவை, சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த வாலி பர்கள் சிலர், அதே பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்த னர். அப்போது ஒரு வாலிபர் மற்றொரு வாலிபரின் தாயாரை தகாத வார்த்தைகளால் பேசி திட்டி உள்ளார். இதனால் அவர்க ளுக்கிடையே தகராறு ஏற்பட்டது. மேலும், இது கோஷ்டி மோதலை உண்டாக்கியது. இருதரப்பிலும் சிலர் ஒருவருக் கொருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர். இதில் ஆறு பேர் கொண்ட கும்பல் எதிர்தரப்பை சேர்ந்த 3 பேரை கத்தியால் குத்தினர். இந்த சம்பவத்தில் சின்னியம்பாளையம் பகுதி யைச் சேர்ந்த புவனேஸ்வரன் (23) என்பவரின் மார்பில் கத்திக் குத்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தார். மேலும், கத்திக்குத்தில் காயமடைந்த கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார் (22) கோவை அரசு மருத்து வமனையிலும் மற்றும் சஞ்சய் என்பவர் தனியார் மருத்துவ மனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, அதேபகுதியைச் சேர்ந்த இரண்டு வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். மேலும், கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.