சேலம், மார்ச் 21- லக்கிம்பூர் கேரியில் விவசாயி கள் படுகொலையில், நீதியை நிலை நாட்ட தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண் டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேளாண் விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி, உத்திர பிரதேச மாநிலம், லக்கிம்பூர் கேரி யில் விவசாயிகள் பேரணியில் ஈடு பட்டிருந்தனர். அப்போது, ஒன்றிய இணையமைச்சரின் மகன் கார் ஏற்றி விவசாயிகளை படுகொலை செய் தார். இந்த விஷயத்தில் நீதியை நிலைநாட்ட தவறிய ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும், தில்லியில் போராடிய விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்ற தவறியதை கண்டித்தும், போராட்ட வழக்கு களை திரும்பப் பெறாமல் துரோ கம் இழைத்ததைக் கண்டித்தும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியி னர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்க (சிபிஐ) மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். இதில், தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு, அகில இந்திய விவசாயிகள் மகா சபா நிர்வாகி சந்திரமோகன், இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன் உள்ளிட்ட ஐக் கிய விவசாயிகள் முன்னணி நிர்வா கிகள் பலர் கலந்து கொண்டு, ஒன் றிய அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.