பள்ளிபாளையம், மார்ச் 19- சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப் பட்டு வந்த கல்வி உதவித்தொகையை எவ் வித காரணமுமின்றி ஒன்றிய அரசு நிறுத்தி சிறு பான்மை மாணவர்களை வஞ்சிக்கிறது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் குற் றஞ்சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - குமாரபாளையம் சாலையில் அமைந்துள்ள, செங்குட்டைபாளையம் பகுதியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் முப் பெரும் விழா ஞாயிறன்று நடைபெற்றது. இவ் விழாவிற்கு கூட்டணியின் வட்டார தலைவர் மு.மாரிமுத்து தலைமை ஏற்றார். வட்டார செயலாளர் ம.தனராஜ் வரவேற்புரையாற்றி னார். முப்பெரும் விழா கொடியினை மாநில இணைச்செயலாளர் செ.நல்லா கவுண்டர் ஏற்றி வைத்தார். மாநில துணைத்தலைவர் அருள் சுந்தர ரூபன், மாவட்ட செயலாளர் ர.மாதேஷ், மாவட்ட தலைவர் ம.கலைச்செல் வன், மாவட்ட பொருளாளர் இரா.மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ் வில், பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புரவலர் திட்டத்தில் இணைந்தவர்களுக்கு பாராட்டு விழா, அகில இந்திய வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்று ஊதியத்தை இழந்த போராட்ட மறவர்களுக்கு பாராட்டு விழா என முப் பெரும் விழாவாக இந்த நிகழ்வு நடைபெற் றது. இந்நிகழ்வில், கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் சிறப்புரையாற் றினார். வட்டார பொருளாளர் ஆர்.ராஜம் மாள் உட்பட ஆசிரியர்கள் பலர் கொண்டனர்.
இதன்பின் மாநில பொதுச்செயலாளர் ச. மயில் செய்தியாளர்களிடம் பேசுகையில், வரும் மார்ச் 23 ஆம் தேதியன்று திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மற்றும் சிறு பான்மை மாணவர்களின் உரிமை மீட்பு மாநாடு நடைபெற உள்ளது. கடந்த நான்கு ஆண்டு களாக அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் என இருவேறாக பாகுபாடு காட்டி, அரசுப்பள்ளி மாணவர்க ளுக்கு வழங்கும் அரசின் நலத்திட்ட உதவி கள் பலவும், அரசு உதவிபெறும் பள்ளி மாண வர்களுக்கு வழங்கப்படுவதில்லை. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளி மாணவர் களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கை கொண்ட ஏழை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
குறிப்பாக, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு சிற்றுண்டி தமிழ்நாடு அரசால் அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இது அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. அதேபோல ஒன்றிய அரசு கடந்த 16 ஆண்டுகளாக ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் ஏழை சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கி வந்த கல்வி உத வித்தொகையை, இந்த கல்வியாண்டு முதல் எவ்வித காரணமுமின்றி நிறுத்தி உள்ளது. இத னால், சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த மாண வர்கள் பெற்று வந்த உதவித்தொகையை இழந்துள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளி களில், முறையாக நியமிக்கப்பட்ட ஆசிரியர் களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக நியமன ஒப்புதல் வழங்கப்படாததால், அவர் கள் குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள் ளது. எனவே, அரசு உதவிபெறும் பள்ளி மாண வர்கள் மற்றும் சிறுபான்மை மாணவர்கள் உரிமை மீட்கப்படும் வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் நிறைவேற் றப்படும் கோரிக்கைகளை ஏற்று, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் நலன் காக் கும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் பொதுத் தேர்வில் மாணவர்கள் பங்கேற்பு வெகுவாக குறைந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரி விக்கின்றன. இதற்கு காரணங்கள் உள்ளன. கொரோனா காலகட்டத்தில் தேர்வு எழுதா மல் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் பலர் தற் போது தேர்வை கண்டு அச்சப்பட்டு, தேர் வுக்கு வர மறுக்கிறார்கள். இன்னும் பெரும் பாலானோர் தனித்தேர்வு எழுதுபவர்களாக உள்ளனர். தேர்வில் பங்கேற்க முடியாத அள விற்கு மாணவர்களின் வறுமையும் உள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வும் மிகக் கடினமானதாக உள்ளதால், தேர்வு எழுதும் மாணவர்கள் எண் ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இது வும் இந்த பொதுத்தேர்வில் மாணவர்கள் வருகை குறைவதற்கான மிக முக்கியமான காரணமாகும், என்றார்.