சேலம், மார்ச் 12- சமையல் எரிவாயு உருளையின் விலையை உயர்த்திய ஒன்றிய மோடி அரசிற்கு கண்டனம் தெரிவித்து, சேலத் தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் விறகு கட் டைகளை தலையில் சுமந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய மோடி அரசு நாளுக்கு நாள் பல்வேறு பொருட்களின் விலை உயர்வை உயர்த்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது வீட்டு உப யோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தி உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை பன்மடங்கு உயரும் அபாயம் ஏற்பட் டுள்ளது. எனவே, உயர்த்தப்பட்ட சமை யல் எரிவாயு உருளையின் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். தமி ழகத்தில் தன்னிச்சையாக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலை கண்டித்தும், ஆன்லைன் ரம்மி விவ காரத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொள் ளும் நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும். ஆன்லைன் ரம் மிக்கு தடை விதிக்க வேண்டும். திரி புரா மாநிலத்தில் பாஜக குண்டர்கள் தொடர்ந்து, அம்மாநில எதிர்க்கட்சி அலுவலகங்கள், முன்னணி ஊழியர் களை மீது நடத்தப்படும் தாக்குதல் களை கண்டித்தும் மார்ச்சிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் ஐந்து ரோடு பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு, சிபிஎம் வடக்கு மாந கர செயலாளர் என்.பிரவீன் குமார் தலைமை கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சேதுமாதவன், மாநகரக் குழு உறுப்பினர்கள் வி.வெங்கடேஷ், ஆர்.குருபிரசன்னா, பி.செந்தில்குமார் உள்ளிட்ட பலர், தலையில் விறகு கட் டைகளை சுமந்து கொண்டு, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.