districts

img

சொத்து வரி, குப்பை வரி உயர்வை கண்டித்து - திருப்பூரில், மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், நவ.11 - திருப்பூரில் கடுமையாக உயர்த்தப்பட்ட சொத்து வரி, குப்பை வரி மற்றும் பாதாள சாக் கடை கட்டணம் ஆகியவற்றை திரும்பப் பெறக்கோரி, மார்க்சிஸ்ட்  கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத் தில் நூற்றுக்கணக்கானோர் பங் கேற்றனர். திருப்பூர் மாநகராட்சியில் கடந்த 2022 ஏப்ரல் முதல் தேதியில்  இருந்து சொத்து வரி உயர்த்தப் பட்டுள்ளது. குறிப்பாக ஏ, பி, சி என  மூன்று மண்டலங்களாக பிரித்து  வரியை உயர்த்தி அறிவித்துள்ள னர். ஆண்டுக்கு ஆண்டு ஆறு சதவீ தம் வரியை உயர்த்துவதுடன், அப ராத கட்டணம் என்று கூடுதலாக ஒரு  சதவீதம் விதிக்கப்படுகிறது. இத்து டன் காலியிட வரியும் உயர்த்தப் பட்டுள்ளது. குப்பை வரி கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நிலுவை  என்று ஒவ்வொரு குடும்பத்தாருக் கும் பல்லாயிர கணக்கில் குப்பை வரி செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இது போதாது என்று பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் மற்றும் பயன்பாட்டு கட்டணமும் ஒவ்வொரு சொத்து வரிக்கும் தனித்தனியாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே சொத்து வைத்திருப்பவர் இரண்டு மூன்று வரிகள் செலுத்தி னால், பாதாள சாக்கடை கட்டண மும் ஒவ்வொரு வரிக்கும் தனித்தனி யாக செலுத்த வேண்டும் என்று  மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள் ளது. அங்கீகார கட்டணமும் ஆன் லைன் முறை என்று சொல்லி அபரி மிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற் கனவே கடுமையான அத்தியாவ சியப் பொருட்கள் விலை உயர்வு, வேலையின்மை, தொழில் நலிவு,  வருமானம் குறைவு ஆகிய பிரச் சனைகளில் சிக்கித் தவித்து வரும்  மக்களுக்கு இந்த கடுமையான வரிச் சுமை பெரும் பாதிப்பை ஏற்ப டுத்தி உள்ளது. இதனால், சொந்த  வீடு வைத்திருப்பவர்கள், வாட கைக்கு குடியிருப்பவர்கள் என சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த வரி உயர்வை கைவிட வேண்டும், குப்பை வரியை ரத்து  செய்ய வேண்டும், பாதாள சாக் கடை கட்டணத்தை ஒரே கட்டண மாக மாற்றி வசூலிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.  திருப்பூர் மக்களிடம் சொத்து வரி, பாதாள சாக்கடை கட்டண உயர்வு, பெரும் மனக்குமுறலாக உள்ளது.  இதனைத்தொடர்ந்து, திருப்பூர்  மக்களிடம் கையெழுத்து பெற்று,  நவம்பர் 11 அன்று மனு கொடுக்கும்  ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கட்சி முடிவு செய்தது. அதன்படி திங்களன்று மாநகராட்சி அலுவல கம் எதிரில் இந்த இயக்கம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் தெற்கு மாநகரச் செய லாளர் டி.ஜெயபால் தலைமையில்  ஆரப்பாட்டம் நடைபெற்றது. இந்த  ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநி லக்குழு உறுபபினர் கே.காமராஜ்,  திருப்பூர் மாநகராட்சி மார்க்சிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் ஆர்.மணி மேகலை, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.மைதிலி, தெற்கு ஒன்றியச் செயலாளர் செ.மணிகண்டன், வேலம்பாளையம் நகரச் செயலா ளர் ச.நந்தகோபால், வடக்கு ஒன் றியச் செயலாளர் ஆர்.காளியப்பன் ஆகியோர் உரையாற்றினர். இந்த இயக்கத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட 500க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப் பாட்டத்தில், சொத்துவரி, பாதாள  சாக்கடை கட்டணம் உயர்த்தப்பட் டதை கைவிட வேண்டும், குப்பை  வரி உயர்வை ரத்து செய்ய  வேண்டும் என்று வலியுறுத்தப்பட் டது.  மாநகராட்சி நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க விட்டால், இந்த பிரச் சனையில், மற்ற அரசியல் கட்சி களையும் சேர்த்துக்கொண்டு திருப் பூர் மாநகர மக்களை அணிதிரட்டி மிகப்பெரும் போராட்டம் நடத்தப்ப டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் கே.காம ராஜ் கூறினார். மேலும் திருப்பூர் நகரில் குண் டும், குழியுமாக இருக்கக்கூடிய சாலைகள் சரி செய்யப்படாத நிலை, மக்கள் பணிகள் தேங்கி இருப்பது, 40 நாட்களுக்கு மேலாக  மாநகராட்சி ஆணையர் நியமிக்கப் படாமல் இருப்பது ஆகிய பிரச் சனைகளையும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் கண்டித்து பேசி னர். நிறைவாக நகர மக்களிடம் பெறப்பட்ட 3 ஆயிரத்திற்கும் மேற் பட்ட வரிக் குறைப்பு மனுக்களை சேகரித்து மாநகராட்சி அலுவல கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஒப் படைத்தனர். ஆர்ப்பாட்டத்தின் முடி வில், மாவட்டக் குழு உறுப்பினர்  வை.ஆனந்தன் நன்றி கூறினார்.