districts

img

கான்கீரிட் கலவை லாரி விபத்து - 3 பேர் பலி

ஈரோடு, ஜன.22- ஈரோடு அருகே கான்கீரிட் கலவை லாரி கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே நஞ்சப்ப கவுண்டன்புதூர் பகுதியில் வடிகால் அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. இப்பணிக்காக கான்கீரிட் தளம் அமைக்க சிமெண்ட் கலவை ஏற்றி கொண்டு வாகனம் ஒன்று  நஞ்சப்பகவுண்டன்புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. சத்தியமங்கலம் - நெகமம் பிரிவு பகுதி குறுகலான சாலை யில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக லாரி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது. இதில், லாரியை ஓட்டி வந்த தேனியை சேர்ந்த கருப்புசாமி, லாரி யில் பயணித்த பவானிசாகர், காராட்சிகோரை பகு தியைச் சேர்ந்த முத்தப்பன், கொத்துக்காடு பகுதியைச் சேர்ந்த சரவணன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தனர். இதுகுறித்து தவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் காவல் துறையினர் 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்திய மங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.