திருப்பூர், ஜூலை 8 – திருப்பூர் காங்கேயம் சாலையில், முதலிபாளையம் பிரி வில் இருந்து தெற்கே அவிநாசிபாளையம் பிரிவு வரை செல்லும் சாலையில் பெருந்தொழுவு வரை கான்கிரீட் கலவை தயாரிக்கும் ஆலைகள் பல உள்ளன. இதில் சாணார்பாளை யம் பிரிவு தென்புறம் இருக்கும் ஆலையில் இருந்து வெள்ளிக் கிழமை காலை கான்கிரீட் கலவை கொண்டு சென்ற லாரியில் இருந்து காங்கிரீட் கலவை சாலையில் ஆங்காங்கே கொட்டி யுள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டி கள் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. ஏற்கெனவே இது போல் சாலையில் கொட்டிய காங்கிரீட் கலவையால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர். இது குறித்து சம்பந்தப்பட்ட காங்கிரீட் கலவை ஆலை உரிமையாளரிடம் பலமுறை கூறியும் அவர்கள் கண்டு கொள்வதில்லை. இத னால் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இதில் பலமுறை விபத்து ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வா கம் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் இங்கு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.