சென்னை, மார்ச் 5- ஆட்டோ தொழிலாளர்களை திறம்பட திரட்டியவர் தோழர் வி.பாண்டியன் என ஜி. ராமகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பெரம்பூர் பகுதிக்குழு உறுப்பி னர் தோழர் வி.பாண்டியன் (61) படத் திறப்பு விழா சனிக்கிழமை (மார்ச் 4) நடை பெற்றது. பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் கலந்து கொண்டு அவரது உருவப்படத்தை திறந்து வைத்து பேசுகை யில், தோழர் பாண்டியன் தன்னை வாலிபர் சங்கத்தில் இணைத்துக் கொண்டு, பின்னர் கட்சியில் இணைந்தார். பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்ட எஸ்.கே.மகேந்திரன், அ.சவுந்தரராசன் ஆகியோரின் உதவியாளர் பணியை மிகச் சிறப்பாக செய்தார். ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் வடசென்னை மாவட்டப் பொருளாள ராகவும், அவ்வமைப்பின் முழு நேர ஊழிய ராகவும் திறம்பட செயல்பட்டு தொழிலாள ர்களை திரட்டினார். கட்சியின் பெரம்பூர் பகுதி குழு உறுப்பினராக கடந்த மாநாடு வரை செயல்பட்டார். அதே போல் சிவகாமி அம்மையார் நகர் குடி யிருப்போர் நலச் சங்கத்தின் பொதுச் செய லாளராக மிகச் சிறப்பாக பணியாற்றி மக்களின் நன்மதிப்பை பெற்றார். அவர் மட்டுமல்லாமல் தனது குடும்பத்தினரையும் இணைத்தவர். தனது இறுதி மூச்சு வரை கட்சியின் வளர்ச்சிக்காக அயராது பாடு பட்டவர் என்றும், அனைவரிடத்திலும் எளி மையாக பழகக் கூடியவர் என்றும் ஜி.ராம கிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். இதில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், ரெப்கோ வங்கி சேர்மன் இ.சந்தானம், சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எ.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.கோட்டிஸ்வரி, எம்.ராஜ்குமார், திமுக 38ஆவது வட்டச் செயலாளர் ஏ.ஆர்.ஆர்.மலைச்சாமி, இந்திரா நகர் தலைவர் வி.கே.காயம்பு, எஸ்.ஏ. காலனி தலைவர் ஆர்.ஜெயபால், எஸ்.ஏ.வெற்றிராஜன் (சிறுபான்மை மக்கள் நலக் குழு) ஆகி யோரும் பேசினர்.