districts

img

தோழர் வி.ஆறுமுகம் படத்திறப்பு விழா

தருமபுரி, பிப்.6- மார்க்சிஸ்ட் கட்சியில் முதுபெ ரும் தலைவரும், விவசாய தொழி லாளர் சங்க ஒன்றிய செயலாளராக பணியாற்றி தோழர் வி.ஆறுமுகம் படத்திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின்‌ ஒன்றியக்குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்க ஒன்றிய செயலாளராக பணியாற்றிய தோழர் வி.ஆறுமுகம் படத்திறப்பு விழா அரூரில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் பி.குமார் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங்கம், தோழர் வி.ஆறு முகம்-த்தின் உருவப்படத்தை திறந்து வைத்து உரையாற்றினார். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.முத்து, ஆர்.சிசு பாலன், சோ.அருச்சுணன், ஆர்.மல் லிகா, மாவட்டக்குழு உறுப்பினர் பி.வி.மாது, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் எம்.தங்க ராஜ் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர். மேலும், தோழர் வி.ஆறுமுகம்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரூர் ஒன்றிய குழு உறுப்பினராக வும் மற்றும் அகில இந்திய விவசாய  தொழிலாளர் சங்கத்தின் அரூர் ஒன் றிய செயலாளராகவும் திறம்பட  பணியாற்றினார். 40 ஆண்டுகளுக்கு  முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் தன்னை இணைத்துக்  கொண்டு, கட்சி மற்றும் வெகுஜென சங்க வளர்ச்சிக்காக அரும்பணி யாற்றியவர் என கட்சி தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.