கோவை, டிச.27- தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் தோழர் எஸ்.சந்திரன் ஞாயி றன்று காலமானார். அரசு ஊழியர் சங்கம் மற்றும் வருவாய்த்துறை ஊழியர் சங்கம் ஆகியவற்றின் கோவை மாவட்ட முன்னாள் தலைவ ராக திறன்பட பணியாற்றியவர் எஸ்.சந்திரன். வட்டாட்சிய ராக இருந்து ஓய்வுபெற்ற பிறகு, தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலை வராக இருந்து சங்கத்தின் வளர்ச்சிக்கும், ஓய்வூதியர்களின் உரிமைக்கான போராட்டத்திலும் முன்னின்று களப்பணி யாற்றி வந்தார். இவர் கோவை வீரகேரளத்தில் குடும்பத் தோடு வசித்து வந்த நிலையில், ஞாயிறன்று அவருக்கு லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இவருக்கு ரத்தினகுமாரி என்கிற துணைவியா ரும், லத்திகா என்கிற மகளும், வினுசந்தர் என்கிற மகனும் உள்ளனர். அரசு ஊழியர்களின் உரிமைக்கான போராட்டத்திலும், எளிய மக்களின் உரிமைக்கான போராட்டத்திலும் எப்போ தும் சளைக்காமல் பணியாற்றி வந்த எஸ்.சந்திரனின் எதிர் பாராத மறைவு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களி டையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரின் மறைவு செய்தியறிந்த மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என். ஜெயபாலன், கே.அஜய்குமார் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள், ஓய்வூதியர் சங்கங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் வீரகேர ளத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.