ஈரோடு, ஜூலை 30- அரசு ஊழியர் சங்கத்தின் தன்னிகரற்ற தலைவர் தோழர் ஆர்.முத்துசுந்தரம் அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் ஈரோடு மாவட்ட அரசு ஊழியர் சங்க அலுவல கத்தில் திங்களன்று நடைபெற்றது. ‘ஆர்எம்எஸ்’ என்று அன்போடு அழைக்கப்படும் தோழர் ஆர்.முத்துசுந்தரம் அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராகவும், அகில இந்திய அரசு ஊழியர் சங்கத்தின் தேசிய தலைவராகவும் செயல்பட்டவர். கம்யூனிச நெறி முறைகளுக்கேற்ப, அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக வாழ்ந்து மறைந்தவர். இளம் தலைமுறையினருக்கு மார்க்சி யத்தை போதிப்பதில் ஆசிரியராகவும், இளம் தலைமுறையி டம் இருந்து கற்றுகொள்ள வேண்டிய தருணத்தில் மாணவ ராகவும் திகழ்ந்தவர். இடதுசாரி இயக்கங்களின் பேரன்பைப் பெற்ற தோழர் ஆர்எம்எஸ் அவர்களின் 7 ஆம் ஆண்டு நினை வேந்தல் அரசு ஊழியர்கள் சங்க ஈரோடு மாவட்டக்குழு அலுவ லகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ராக்கிமுத்து தலைமை ஏற்றார். மாநில துணை பொதுச்செயலாளர் மு.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் ச.விஜய மனோகரன் மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் கே.ராஜ்குமார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று, ‘ஆர்எம்எஸ்’ அவர்களின் நினைவுகளை பகிர்ந்தனர். இதில், திரளானோர் பங்கேற்றனர்.