மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ப.ஆறுமுகம் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினை வேந்தல் நிகழ்வு, ஈரோடு மாநகரம், 60 ஆவது வார்டு கிளைகள் சார்பில் மோளக்கவுண்டம்பாளையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மூத்த தோழர் கே.துரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ராஜா, கிளைச் செயலாளர் ஆர்.மாரிமுத்து, வீரபாண்டியன் மற்றும் தோழர் ஆறுமுகம் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.