districts

img

தோழர் என்.சங்கரய்யா 101 ஆவது பிறந்த நாள் விழா

திருப்பூர், ஜூலை 15 –  இந்திய விடுதலைப் போராட்ட வீரரும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெ ரும் தலைவருமான என்.சங்கரய்யாவின் 101 ஆவது பிறந்த தினமான வெள்ளிக்கிழமை திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் செங்கொடி  ஏற்றி, மக்களுக்கு இனிப்பு வழங்கி கோலாக லமாகக் கொண்டாடப்பட்டது. திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட் டக்குழு அலுவலகம் முன்பாக என்.சங்க ரய்யா பிறந்தநாள் விழாவில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் செங்கொடி ஏற்றி  வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்  எம்.ராஜகோபால், காமராஜ் ஆகியோர் சங்க ரய்யாவின் பணிகளையும், தற்போதைய அர சியல் கடமைகளையும் நினைவூட்டிப் பேசி னர். முன்னதாக சரவெடி வெடிக்கப்பட்டு, அப் பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சங்கரய்யா சிறப்பிதழ் விநியோகம் செய்யப் பட்டது.

அதேபோல் தெற்கு மாநகருக்கு உட்பட்ட  வெள்ளியங்காடு பகுதியில் செந்தோரணங்க ளால் அலங்கரித்து வைக்கப்பட்ட சங்கரய்யா  உருவப்படத்துக்கு முன்பாக மார்க்சிஸ்ட் கட் சியினர் எழுச்சி முழக்கம் எழுப்பினர். மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டக்குழு  உறுப்பினர் எஸ்.சுந்தரம், நகரக்குழு உறுப்பி னர்கள் கே.பொம்முதுரை, ஆறுக்குட்டி ஆகி யோர் உரையாற்றினர். ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதேபோல் கருவம்பாளையம் பகுதி யில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ஜி. மூர்த்தி செங்கொடியை ஏற்றி வைத்தார். கட்சி  கிளை செயலாளர் சுரேஷ்குமார், ஆட்டோ சங்க செயலாளர் சிவராமன் ஆகியோர் உரை யாற்றினர். கட்சி அணியினர் பங்கேற்றனர். கல்லம்பாளையத்தில் நடைபெற்ற விழா வில் மாதர் சங்க தலைவர் மினி செங்கொ டியை ஏற்றி வைத்தார். இதில் முத்துசாமி,  ஜெயக்குமார் உள்ளிட்டோர் உரையாற்றி னர். காங்கேயம் சாலை சிடிசி பணிமனை முன் பாக நடைபெற்ற சங்கரய்யா பிறந்தநாள் நிகழ்வில் மாநகரச் செயலாளர் டி.ஜெயபால்,  மாவட்டக்குழு உறுப்பினர் பி.செல்லதுரை மற்றும் சிவராமன் ஆகியோர் உரையாற்றி னர். 

திருப்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாநல்லூரில் கட்சி ஏ கிளைச் செயலாளர் ஜி.சண்முகம் தலைமையில் விவ சாயசங்கத் தலைவர் ரங்கசாமி, வடக்கு ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் பி.கே.கருப்பசாமி, தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செங்கொடி ஏற்றி வைத்து  பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட் டது. அங்கேரிபாளையம் வி.பி.சிந்தன் நினை வகம் முன்பாக நடைபெற்ற என்.சங்கரய்யா  பிறந்தநாள் விழாவில் கட்சிக் கொடி ஏற்றி  வைத்து வாழ்த்து முழக்கங்கள் எழுப்பினர். இதில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ்,  வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளி யப்பன், மூத்த தோழர் கே.பழனிசாமி, ஒன்றி யக்குழு உறுப்பினர் கே.வசந்தி உள்பட கட்சி  அணியினர் உற்சாகமாகக் கலந்து கொண்ட னர். அங்கேரிபாளையம் ஆரம்பப்பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச் சியை பகிர்ந்து கொண்டனர்.