இந்திய விடுதலை போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் என்.சங்கரய்யாவின் 102 ஆவது பிறந்தநாளையொட்டி ஈரோடு நகரம், பெரியார் நகர் கட்சி கிளை சார்பாக செம்மலர் மாத இதழுக்கு 102 ஆண்டு சந்தாக்களை, சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம், கிளை செயலாளர் பொன்.பாரதி வழங்கினார். இதில், மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி, நகர செயலாளர் பி.சுந்தரராஜன், ஈரோடு நகரத்தின் மூத்த தோழர் வி.ராஜூ ஆகியோர் உடனிருந்தனர்.