districts

img

தோழர் எம்.தங்கவேல் 20ஆம் ஆண்டு நினைவஞ்சலி

திருப்பூர், ஜூன் 10 - மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும்,  விவசாயிகள் சங்கத் தலைவருமான தோழர் எம்.தங்கவேல்  20ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி வெள்ளியன்று கடைப் பிடிக்கப்பட்டது. உடுமலை ஒன்றியம், குரல்குட்டை, பொன்னாலம்மன் சோலை கிளைகளில் தோழர் எம்.தங்கவேல் நினைவஞ்சலி  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் உடுமலை ஒன்றிய செயலாளர் கி.கனகராஜ், தமிழ்நாடு  விவசாயிகள் சங்க உடுமலை தலைவர் ஏ.ராஜகோபால், தென்னை விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.டி. அருண்பிரகாஷ், கிளைச் செயலாளர்கள் தட்சிணாமூத்தி, ஆண்டமுத்து, காளீஸ்வரி, ஆனந்தன் மற்றும் கட்சி உறுப்பி னர்கள் பங்கேற்று எம்.தங்கவேலுக்கு மலரஞ்சலி செலுத் தினர்.