districts

img

பன்முக ஆளுமை கொண்டவர் தோழர் எம்.ஆறுமுகம்!

தலைவர்கள் புகழாரம் தருமபுரி, அக்.25- சித்தாந்தவாதி, மக்கள் போராளி உள்ளிட்ட பன்முக ஆளுமை கொண்ட வர் தோழர் எம்.ஆறுமுகம், என மார்க் சிஸ்ட் கட்சி தலைவர்கள் புகழாரம் சூட்டி னர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட செயற்குழு உறுப்பி னர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பொறுப் புகளில் திறம்பட பணியாற்றி மறைந்த தோழர் எம்.ஆறுமுகம் அவர்களின் 5  ஆம் ஆண்டு நினைவுதினம் வெள்ளி யன்று அனுசரிக்கப்பட்டது. பென்னா கரம் அருகே உள்ள மடம் கிராமத்தில் அமைந்துள்ள தோழர் எம்.ஆறுமுகம் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச் சிக்கு, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர் வி.மாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நடரா ஜன்  உள்ளிட்ட தலைவர்கள், தோழர் எம்.ஆறுமுகம் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின் நினைவஞ்சலி கூட்டம் நடை பெற்றது. இந்நிகழ்வில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மூத்த தலைவர் இளம்பரிதி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன், அதிமுக மாவட்டத் தலைவர்கள் எஸ்.ஆர்.வெற்றிவேல், டி.ஆர்.அன்பழகன், பென்னாகரம் ஒன் றியக்குழு தலைவர் கவிதா ராமகிருஷ் ணன், திமுக ஒன்றியச் செயலாளர்  முரு கேசன், பேரூராட்சித் தலைவர் வீர மணி, திராவிடர் கழக தலைவர் தீர்த்த கிரி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, சோ.அருச்சுணன், வே.விசுவநாதன், எஸ்.கிரைஸாமேரி, ஆர்.மல்லிகா, வி.ரவி, ஆர்.சின்னசாமி, இடைக்கமிட்டி  செயலாளர்கள் ஜி.சக்திவேல், என்.பி.முருகன், ஆர்.வெங்கடாச்சலம், என். கந்தசாமி, எஸ்.எஸ்.சின்னராஜி, மாவட் டக்குழு உறுப்பினர்கள் கே.அன்பு, எம்.சிவா, எம்.குமார், சி.ராஜி, டி.ஆர்.சின்னசாமி வி.சுதா, எஸ்.செல்லன் உட் பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.ஜீவா னந்தம் நன்றி கூறினார்.