மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் கோடியேரி பால கிருஷ்ணன் மறைவையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் அவ ரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத்தொடரந்து நடை பெற்ற நினைவேந்தல் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொரு ளாளர் எம்.ஆறுமுகம், கோவை மாவட்ட செயலாளர் சி.சிவசாமி உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றி னர். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு மற்றும் முன்னணி ஊழியர்கள் திரளா னோர் பங்கேற்று கோடியேரி பாலகிருஷ்ணனுக்கு அஞ்சலி செலுத்தினர்.