திருப்பூர், ஜூன் 19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து மறைந்த தோழர் கே.தங்கவேல் நினை வகம் திறப்பு விழா ஞாயிறன்று திருப்பூ ரில் நடைபெற்றது. திருப்பூர் முருங்கபாளையம் தோழர் கே.தங்கவேல் நினைவகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கே.தங்கவேல் உருவப்படத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் திறந்து வைத்தார். தலைவர் கள் உருவப்படங்களை மாநில குழு உறுப்பி னர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப் பினர் கே.உன்னி கிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். புதிய கட்டிட கல் வெட்டை மாவட்ட செயலாளர் செ.முத்துக் கண்ணன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச் சிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கிளை உறுப்பி னர் எம்.கோவிந்தசாமி தலைமை வகித் தார். இந்த நிகழ்வில் தங்கவேல் நினைவு கட்டிடத்துக்கு நிதி உதவி செய்த அனை வருக்கும் தலைவர்கள் நினைவு பரிசு வழங் கினர். இதில், அதிமுகவை சேர்ந்த முன் னாள் அமைச்சர் எம்.எஸ்.எம் ஆனந்தன் எம்எல்ஏ., மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங் கம், மாநிலக் குழு உறுப்பினர் கே.காமராஜ், மாநகரச் செயலாளர் பி.ஆர்.கணேசன், இந் திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் எம்சி மற்றும் முருங்கபாளையம் பகுதி மக்கள், மார்க் சிஸ்ட் கட்சியினர், பல்வேறு அரசியல் கட்சியினர் பெருந்திரளாக இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.