districts

img

தோழர் கே.ரமணி 17ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

கோவை, மே 30- மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந் திய தொழிற்சங்க மையத்தின் முது பெரும் தோழர் கே.ரமணியின் 17 ஆம் ஆண்டு நினைவு தினம் கோவையில்  அனுசரிக்கப்பட்டது. தமிழக தொழிற்சங்க இயக்கத் தின் முன்னோடியும், மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் கே. ரமணி அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு தினம் எழுச்சியோடு அனு சரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்டக்குழு அலு வலகத்தில் நடைபெற்ற நினைவேந் தல் கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவ ஞானம் தலைமை ஏற்றார். இதில், கட்சியின் மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன், செயற்குழு உறுப்பினர் கள் கே.எஸ்.கனகராஜ் மற்றும் மாவட் டக்குழு, நகர, தாலுகா, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் கே.ரம ணியின் இளைய மகள் வத்சலா, மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப் பினர் வி.இராமமூர்த்தி உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர்.  முன்னதாக, தோழர் கே.ரமணி யின் உருவப்படத்திற்கு மாலை அணி வித்து, மலர் தூவி மரியாதை செலுத் தினர். இதனையடுத்து, கே.ரமணி யின் பொதுவாழ்வில் கடைபிடித்த எளிமை, நேர்மை, தூய்மை போன்ற  கம்யூனிஸ்ட்டுக்கே உரித்தான வாழ்வு குறித்து நினைவு கூர்ந்தனர். இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு பகு திகளில் தோழர் கே.ஆர். அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது.