districts

img

தோழர் ஆறுக்குட்டி படத்திறப்பு விழா

கோவை, அக்.2 மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்  ஆறுக்குட்டி அவர்களின் படத்திறப்பு விழா அன்மையில் நடைபெற்றது. இதில், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் பங் கேற்று, தோழர் ஆறுக்குட்டி அவர்க ளின் நினைவுகளை பகிர்ந்து கொண்ட னர்.  பீளமேடு பகுதியில் பயனீர் மில்லில் சிஐடியு கிளையைத் தொடங்கி தொழி லாளர் உரிமைகளுக்காகப் போராடிய  ஆறுக்குட்டி, அவசர நிலை காலத்தில்  தலைமறைவாக இருந்த தோழர்க ளுக்கு உதவி செய்தவர். தனது இறுதி  நாட்கள் வரையில், மார்க்சிஸ்ட் கட்சி மற் றும் சிஐடியு இயக்கங்களில் தொடர்ந்து  பங்கேற்றவர். தனது குடும்பம் முழுவ தும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஆதரவு குடும் பமாக உருவாக்கியவர். இந்நிலையில், கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி வயது மூப்பு காரணமாக தோழர் ஆறுக்குட்டி உயிரிழந்தார்.  இவரின் படத்திறப்பு விழா நவஇந் தியா பகுதியில் உள்ள தனியார் அரங் கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன் னாள் மாவட்டக் குழு உறுப்பினர் நடரா ஜன் தலைமை வகித்தார். பீளமேடு  நகரக் குழுச் செயலாளர் கே.பாண்டி யன் வரவேற்றார். இதில், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் சி‌.பத்மநாபன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் கே.மனோகரன், வி.தெய்வேந்திரன், கே.அஜய்குமார் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, மதிமுக, அதிமுக உள்ளிட்ட பல் வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகி கள் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தி னர்.