கோவை, ஜூலை 31- அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்தவர்க ளுக்கு கட்டாயம் வேலை என்கிற நிலை உருவாக்கப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் செய்தி யாளர்களிடம் தெரிவித்தார். தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் கோவை கவுண்டம்பாளை யம் பகுதியில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையங்களை ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந் தித்து அமைச்சர் சி.வி.கணேசன் கூறுகையில், முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள 102 தொழிற்பயிற்சி மையங்களில் 72 நவீன தொழில்நுட்ப மையத்தை இளைஞர்களுக்காக உரு வாக்கி கொடுத்துள்ளார். உலகத்தரம் வாய்ந்த நிறுவனங்க ளில் பணிபுரிய வாய்ப்பை இதன் மூலம் உருவாக்கி உள் ளது. “நான் முதல்வன்” பற்றி மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் என்ன படிக்கலாம், எப்படிப்பட்ட பயிற்சி பெறலாம். படித்து முடித்த பின் எந்த நிறுவனத்தில் வேலை செய்வது, குறித்து வடிவமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு கட்டாயம் வேலைவாய்ப்பு உருவாக்குவது அரசு குறிக்கோளாக உள் ளது. 102 ஐடிஐகளில் 95 சதவீத அளவிலான மாணவர் சேர்க்கை இந்த வருடம் எதிர்பார்க்கிறோம். அரசு கலை கல்லூரி பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி என அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்பயிற்சி மூலம் வாய்ப்புகளை வழங்கி வருகிறது. தாழ்வு மனப்பான் மையை நீக்கி ஐடிஐ படிக்கக்கூடிய அனைவருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கி தர வேண்டும் என்பதே முதலமைச்சர் நோக்கம், என்றார்.