districts

img

ஊத்துக்குளி அரசு மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை

திருப்பூர், ஜூன் 1 - திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா அரசு மருத்துவமனையில் செவ்வாயன்று ஒரு சிக்கலான  கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை நிகழ்த்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், ஊத்துக் குளி தாலுகா அரசு மருத்துவமனை கடந்த 2018ஆம் ஆண்டு தரம் உயர்த் தப்பட்டது. இந்த அரசு மருத்துவம னையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு கர்ப்பப்பை வாயில் ஆரம்ப நிலை புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பையை அகற்ற வேண்டிய அவசியம் ஏற்பட் டது. இது போன்ற அறுவை சிகிச்சைகள் சாதாரணமாக திருப்பூரிலும் ஈரோடி லும் நடைபெறும். ஆனால் அப்டாமி னல் ஹைஸ்டரேக்டமி எனப்படும் இந்த நோய்க்கான சிகிச்சை செவ் வாய்க்கிழமை ஊத்துக்குளி அரசு மருத்துவமனையிலேயே வெற்றிகர மாக மேற்கொள்ளப்பட்டது. மருத்து வர்கள் வசுமதி, அருண் பாபு, செந்தில் மற்றும் செவிலியர்கள் தனலட்சுமி, சுபா ஜெயஸ்ரீ ஆகியோர் கொண்ட குழு வினர் இந்த சிகிச்சையை செய்தனர். இது தொடர்பாக ஊத்துக்குளி அரசு மருத்துவமனை பொறுப்பு மருத் துவ அலுவலர் டாக்டர் கார்த்திகேயன் கூறியதாவது:  ஊத்துக்குளி அரசு மருத்துவ மனையில் தற்பொழுது எல்லா வசதிக ளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன்ற சிகிச்சை முறைகள் இதற்கு முன் இங்கு நடைபெற்றது இல்லை. தற்போது இந்த சிகிச்சை திருப்பூரிலி ருந்து மருத்துவரை வரவழைத்து இங்கு வெற்றிகரமாக செய்யப்பட்டுள் ளது, என்று தெரிவித்தார்.