கோவை, மே 22-
தமிழக மக்கள் விடுதலை கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது, கோவை மாவட்டத்தில் வாடகை வீடுகளின் எண்ணிக் கையை அரசாங்கம் தொகுக்க வேண்டும். வாடகை வீடுகளில் வாடகை தொகையை சதுர அடி அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும். மேலும் சாதி, மதம் கேட்டு வாடகை வீடு தர மறுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக பட்டா வழங்கபடாமல் இருக்கும் பொதுமக்க ளின் வீட்டு வாடகை செலவை அரசாங்கமே ஏற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.