districts

img

பொதுப்பாதை ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் புகார்

சேலம், ஏப்.29- நடுவனேரி பகுதியில் பொது வழிப்பாதையை ஆக்கிர மித்த நபர் மீது நடவடிக்கை எடுத்து, சாலை வசதி செய்து தர வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தனர். சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள நடுவனேரி, மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், மேட்டுக்காடு பகுதியில் 30 குடும்பங்கள் உள்ளன. 12  அடி வீதம் 29 குடும்பங்கள் பொது வழிப்பாதைக்காக நிலத்தை  கொடுத்தோம். கடந்த 30 ஆண்டு காலமாக அந்தப்பாதையை மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், அதேபகுதியைச் சேர்ந்த முனியப்பன் மற்றும் அவரது மகன்கள் சுரேஷ், அரு ணாச்சலம் ஆகியோர் பொதுப்பாதையை மறித்து, யாரும்  பயன்படுத்தாத அளவிற்கு தடுத்துள்ளனர். இதுகுறித்து கேட் டதற்கு பாதையை விட முடியாது என்றும், மண் சாலையை தார்சாலையாக மாற்றவும் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடு கின்றனர். இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்த போது, நடவடிக்கை இல்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, வழிப்பா தையை தடுத்து ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவ டிக்கை எடுத்து, மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும், என்றனர்.