districts

img

சட்டவிரோதமாக மரம் வெட்டுவதாக புகார் நூதன முறையில் சார் ஆட்சியரிடம் மனு

பொள்ளாச்சி, மே 10- வேட்டைக்காரன் புதூர் அரசு மருத்துவமனையில் இருந்த மரங்களை சட்டவிரோதமாக வெட்டிய அரசு அதி காரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஆர்வலர் ஒருவர் நூதன முறையில் சார் ஆட்சியரிடம் மனு அளித் தார். கோவை மாவட்டம், ஆனமலை தாலுகாவிற்குட்பட்ட வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனையில், மருத் துவ குணம் கொண்ட மூலிகை வகையைச் சார்ந்த நூறு வருடங்கள் பழமையான மரங்கள் இருந்தன. இந்நிலை யில், மரத்தின் கிளைகளை வெட்ட அனுமதி பெற்ற வரு வாய்த் துறையினர், அதற்கு மாறாக 18 மரங்களை வெட்டி யதாக கூறப்படுகிறது. ஆகவே, சட்டவிரோதமாக மரம் வெட்டிய அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, காந்தி பூபதி என்ற சமூக ஆர்வலர் இலை, தளைகளுடன் வந்து பொள் ளாச்சி சார் ஆட்சியர் ஞானதேவ் சுபம் தாக்கரேவிடம் மனு அளித்தார். இம்மனுவை பெற்றுக் கொண்ட சார் ஆட்சி யர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித் தார்.