districts

img

தனியார் பள்ளியில் நடைபெறும் கட்டணக் கொள்ளை முதன்மை கல்வி அலுவலரிடம் மாணவர் சங்கம் புகார்

ஈரோடு, ஜூன் 24- தனியார் பள்ளிகளில் நடக்கும் கட் டணக் கொள்ளை மற்றும் முறைகேடு களைத் தடுக்க வலியுறுத்தி, ஈரோடு  மாவட்ட முதன்மை கல்வி அலுவலரி டம் இந்திய மாணவர் சங்கத்தினர் மனு  அளித்தனர். முன்னதாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தரம் குறித்து இந்திய மாணவர் சங்கத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் அடிப்படையில் இந்த மனுவினை அளித்தனர்.  அம்மனுவில் கூறியிருப்பதாவது, ஈரோடு மாவட்டத்தில் பல தனியார் பள் ளிகள் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப் படை வசதிகளே இல்லாமல் செயல்படு கிறது. சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி இன்றியும் சில பள்ளி கள் இயங்கி வருகின்றன. சிறப்பு வகுப் புகள் இரவு 8 மணி வரை நடத்தப்படு கின்றன. விடுதிகள் மறுக்கப்பட்டு, வகுப்பு அறையில் தங்க வைக்கப்படு கின்றனர். ஒரு அறையில் 60 மாண வர்கள் கட்டாயப்படுத்தி தங்க வைக் கப்படுகின்றனர். இருபாலர் பயிலும் நிறு வனங்களில் பாகுபாட்டுடன் நடத்தப்படு கின்றனர். விளையாட்டு நேரம் அனும திக்கப்படுவதில்லை. கால அட்டவ ணையிலிருந்தே விளையாட்டு நேரம் நீக்கப்படுகிறது. ஷு, டை, ஐடி கார்டு, பெல்ட், துண்டு  மற்றும் தலைமுடிக்காக ரூ.5 முதல் 100 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. விடுமுறை தினங்களிலும் பள்ளிகள்  இயங்குகின்றன. பள்ளிகளில் புகார் பெட்டி எதுவும் வைக்கப்படவில்லை. மேலும் பள்ளிக்கட்டணம் அனைவரின்  பார்வையில் படும்படி வெளிப்படை யாகக் காட்சிப்படுத்தப்படவில்லை. பள்ளி வளாகத்தில் போதைப் பொருட் கள் பயன்படுத்தும் நிலை உள்ளது. இவையெல்லாம் இந்திய மாணவர் சங்கம் அரசு மற்றும் தனியார் பள்ளி களில் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே முதன்மை கல்வி  அலுவலர் தலையிட்டு, உரிய நடவ டிக்கை மேற்கொண்டு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மாண வர் சங்க ஈரோடு மாவட்டத் தலைவர்  நவீன் மற்றும் செயலாளர் ரஞ்சித் உள் ளிட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர்.