districts

நிர்வாகப் பணிகளில் தலையிடும் பாஜக ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மீது புகார்

திருப்பூர், ஜூலை 29- ஊராட்சியின் அனைத்து நிர்வாகப்  பணிகளிலும் தலையிடும் புதுப்பாளை யம் பாஜக ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 8 ஆவது வார்டு உறுப்பினர் கே.பாலசுப்பிரமணியம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று புகார் அளித்துள்ளார்.  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் திங்களன்று கே.பாலசுப்பிரம ணியம் அளித்த மனுவில் கூறியிருப்பதா வது, புதுப்பாளையம் ஊராட்சியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எனது  8ஆவது வார்டில் ஆழ்துளை கிணறு  மின் மோட்டார் பழுது ஏற்பட்டதை, ஊராட்சிமன்றத் தலைவர்கஸ்தூரி பிரியாவிடம் தெரிவித்தேன். அதற்கு அவரின் கணவர் ஏ.பாலச்சந்திரன் என்பவர் மன்ற கூட்ட தீர்மானங்க ளுக்கு கையெழுத்துப் போட்டால் மட்டுமே மின் மோட்டார் பழுதை சரி செய்து தருவேன் எனக் கூறி வருகி றார். மேலும், ஊராட்சியின் அனைத்து நிர்வாகப் பணிகளிலும் ஊராட்சிமன்ற அலுவலகத்திலும் நேரடியாக ஊராட் சிமன்றத் தலைவரின் கணவர்கே.ஏ. பாலச்சந்திரன் என்பவரே தலையிட்டு நிர்வகித்து வருகிறார். இது சட்டத்திற்கு புறம்பான முறை கேடான செயலாகும். மேலும், கோவை  மாவட்டம் சூலூர் வட்டாரம் செம்மாண் டம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மூனு கட்டிபாளையம் கிராமத்திற்கு புதுப்பா ளையம் ஊராட்சியில் இருந்து முறை யாக மன்ற தீர்மானம் நிறைவேற்றா மல் தார் சாலை அமைத்து, திறப்பு விழா வும் செய்தபின்பு மன்றக் கூட்டத்தை கூட்டி தீர்மானம் போடுவதற்கு கையெழுத்து போடுமாறு நிர்ப்பந்தம் கொடுக்கிறார். அடுத்த மாவட்டத்தில் உள்ள ஊராட்சிக்கு புதுப்பாளையம் ஊராட்சியின்  நிதியில் இருந்து மாவட்ட  ஆட்சியரின் அனுமதி பெறாமல் பணி  செய்ததற்கு ஊராட்சிமன்ற உறுப்பினர் கள் கையெழுத்து போடுவதற்கு அதிகா ரம் உள்ளதா? இப்படி சட்டத்திற்கு புறம் பாக செயல்படும் ஊராட்சி நிர்வாகத் தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆவ ணம் செய்ய வேண்டும் என கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சவுண்டாம்பிகா நகர்கிளைச்செயலா ளர் ராமகிருஷ்ணன்,வார்டு உறுப்பி னர் குமரவேல் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.