தேசிய கீதம் பாடாதது குறித்து புகார் பள்ளி தலைமையாசிரியர் விளக்கம்
சேலம், பிப்.5- எடப்பாடி அரசுப்பள்ளியில் தேசிய கீதம் பாடாதது குறித்து, பள்ளி தலைமையாசிரியர் விளக்கம் அளித்துள் ளார். சேலம் மாவட்டம், எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த ஒரு வாரத்தித் கும் மேலாக காலை இறைவணக்கத்தின்போது, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மட்டும் பாடப்பட்ட நிலையில், தேசிய கீதம் பாடப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து விமர்ச னம் எழுந்த நிலையில், மாவட்டக் கல்வி அலுவலர் பெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசி ரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து அப் பள்ளி தலைமையாசிரியர் விஜயா கூறுகையில், பள்ளியில் தற்போது மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. மாணவர்களின் நலன் கருதி இறைவணக்க நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் நிறைவு செய்யப்பட்டது. இனிவரும் நாட்களில் வழக்கம் போல தேசிய கீதம் இசைக்கப்படும், என்றார்.
மலைவாழ் படி வழங்க கோரிக்கை
ஈரோடு, பிப்.5- மலைப்பிரதேசங்களில் பணியாற்றும் அரசு ஊழியர் களுக்கு மலைவாழ் படி மற் றும் குளிர் காலப் படி வழங்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. அதன்படி தமிழ் நாடு அரசு மேற்கண்ட படிகள் வழங்க கடந்தாண்டு டிசம் பர் மாதம் அரசாணை வெளி யிட்டது. அரசாணை வெளி யிடப்பட்டு 3 மாதங்கள் கடந்த நிலையிலும் ஈரோடு மாவட் டத்தில் வழங்கவில்லை. இது குறித்து அரசு ஊழியர் சங் கத்தினர் ஈரோடு மாவட்ட கரு வூல அலுவலரிடம் மனு அளித்தனர். மாதாந்திர ஊதிய பட்டியலில் மலைப் படி பெறும் வகையில் நடவ டிக்கை மேற்கொள்ள வேண் டும். இல்லையெனில் மார்ச் 4 ஆம் தேதியன்று மாவட்ட கரு வூலம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரி வித்தனர். இம்மனு அளிக்கையில், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். ரமேஷ், மாவட்டச் செயலா ளர் ச.விஜயமனோகரன், ஈரோடு வட்டக்கிளைச் செய லாளர் எம்.சந்திரமெளலி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
லஞ்சம் பெற்ற நில அளவையர், விஏஓ கைது
நாமக்கல், பிப்.5- நிலத்தை அளவீடு செய்து, தனிப் பட்டா வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்ட நில அளவையர் மற்றும் கிராம நிர் வாக அலுவலர் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன். இவர் தனது மாமியார், மனைவிக்கு தானமாக கொடுத்த நிலத்தை அளவீடு செய்து, தனிபட்டா வழங்குமாறு இ - சேவை மையம் மூலம் விண்ணப்பம் செய்துள்ளார். இந்த விண்ணப்பம் நாமக்கல் வட்டாட்சியருக்கு வந்துள் ளது. வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து இந்த நிலம் தொடர்பாக விசா ரித்து ஒப்புதல் வழங்க அளவையாளர் அசோக்குமார் (33), அணியார் கிராம நிர் வாக அலுவலர் வேலுச்சாமி (56) ஆகி யோருக்கு ஆன்லைனில் விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட அசோக்குமார் நில அளவை செய்ய ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத திருமுரு கன் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுக்க ஆலோசனை வழங்கினர். இதற்கிடையே, திருமுரு கனை தொடர்பு கொண்ட கிராம நிர்வாக அலுவலர் வேலுச்சாமி தன்னிடம் ரூ.5 ஆயிரத்தை கொடுக்குமாறும், அதை அசோக்குமாரிடம் கொடுத்து விடுகி றேன் என்றும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து செவ்வாயன்று இரவு திருமுருகன், கிராம நிர்வாக அலு வலர் வேலுச்சாமியிடம் ரூ.5 ஆயிரத்தை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த துணை காவல் கண்காணிப்பாளர் சுபா ஷினி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர். அப்போது அவர் அசோக் குமார் சொன்னதால் நான் வாங்கினேன் என போலீசாரிடம் தெரிவித்தார். இந்த தகவல் கிடைத்ததும், ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீ சார் நாமக்கல்லில் இருந்த நில அளவை யர் அசோக்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.
கையூட்டு பெற்ற உடுமலை மின்வாரிய உதவிப் பொறியாளருக்கு 3 ஆண்டு கடுங்காவல்
திருப்பூர், பிப்.5 – வணிக கட்டிடம் கட்டி மின் இணைப்புக்கு விண்ணப்பித்த வரிடம் கையூட்டு பெற்ற உடுமலைபேட்டை மின்வாரிய உத விப் பொறியாளருக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு கடுங்கா வல் தண்டனை விதித்துள்ளது. உடுமலை தாலுகா பூலாங்கிணறு ஜேவிஎன் நகரைச் சேர்ந்தவர் கே.வி.பாலு. இவர் தனது இடத்தில் கடை கட்டி அதற்கு மின் இணைப்பு வழங்கும்படி உடுமலை நகர மின்வா ரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இந்த விண் ணப்பத்தை ஆய்வு செய்து மின் இணைப்பு வழங்க ரூ.8500 வழங்கும்படி மின்வாரிய உதவிப் பொறியாளர் டி.முத்துக்கி ருஷ்ணன் பாலுவிடம் கேட்டிருக்கிறார். கையூட்டுக் கொடுக்க மனமில்லாத பாலு, திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தார். அவர்கள் ஆலோசனைப்படி கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி பாலு ரசாயணம் தடவிய பணத்தைக் கொடுத்திருக்கிறார். முத்துக்கிருஷ்ணன் அந்த பணத்தை வாங்கியவுடன் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீசார் அங்கு வந்து அவரைக் கைது செய்து வழக்குப்ப திவு செய்தனர். இந்த வழக்கு திருப்பூர் முதன்மை நீதித்துறை நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு, பிப்ர வரி 5ஆம் தேதி புதன்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. கையூட் டுப் பெற்ற மின்வாரிய உதவிப் பொறியாளர் டி.முத்துக் கிருஷ்ணனுக்கு மூன்றாண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து சிறப்பு நீதிபதி உத்தர விட்டார்.
கார்பன் வெளியேற்றம் இல்லாத திருப்பூர்: 2030க்குள் அடைய குறிக்கோள்
திருப்பூர், பிப். 5 – 2030ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியேற்றம் இல்லாத திருப்பூர் என்ற நிலையை அடைய குறிக்கோள் வைத்துள்ள தாக திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் தெரிவித்தனர். திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், ஆரோவில் கன்சல்டிங் நிறுவனத்துடன் இணைந்து “காலநிலை சவால்களுக்குத் தயாராவது மற்றும் மேற்கூரை சூரியசக்தி” என்ற தலைப் பில் கார்பன்மயத்தை குறைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை கடந்த செவ்வாயன்று நடத்தியது. ஏற்றுமதியாளர் சங்க பிராண்டிங் மற்றும் நிலைத்தன்மை துணைக் குழுவின் துணைத் தலைவர் மேழிசெல்வன் வரவேற் றார். அப்போது கடந்த 2015ஆம் ஆண்டு முதல் நீடித்த வளர்ச்சி நிலைத்தன்மைக்கு திருப்பூர் முயற்சித்து வருகிறது. இந்தியா விலேயே சாயக்கழிவு வெளியேற்றம் இல்லாத மறுசுழற்சித் தொழில்நுட்பத்தை முதலில் அறிமுகப்படுத்தியது திருப் பூர். அதன்படி 2030க்குள் கார்பன் வெளியேற்றத்தில் நிகர பூஜி யம் என்ற நிலையை அடைய குறிக்கோளுடன் செயல்படுவ தாக கூறினார். இணைச் செயலாளர் குமார் துரைசாமி உலக ளாவிய அளவில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது, காலநிலை மாற்றம் பற்றி கூறிய அவர் புதுப்பிக்கத்தக்க ஆற் றலை உற்பத்தி செய்வதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஆரோவில் கன்சல்டிங் சந்தோஷ் வேலு கருத்தரங்கத் தலைப்பில் பேசினார். வி.ஆர்.என்.சி. ராமன் மணவாளன் நன்றி கூறினார்.
பிப்.7 விவசாயிகள் குறைதீர் கூட்டம்
உடுமலை, பிப்.5- உடுமலைப்பேட்டை மற் றும் அமராவதி வனச்சர கத்திற்கு உட்பட்ட பகுதிக ளில் வன உயிரினங்களால் ஏற்படும் இடையூறுகள் மற் றும் அதனை தடுக்கும் வழி முறைகள் தொடர்பாக கலந் தாலோசிக்கும் வகையில், பிப்.7 ஆம் தேதி வெள்ளிக்கி ழமை காலை 10.30 மணிய ளவில் வனச்சரக அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.
மாணவிக்கு பாலியல் தொல்லை இளைஞருக்கு ஆயுள் தண்டனை
சேலம், பிப்.5- பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, சேலம் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு மாணவிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக, மனோஜ் குமார் (28) என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டார். இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், மாண விக்கு பாலியல் தொல்லை அளித்த மனோஜ் குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஓய்வூதியர் சங்க அமைப்புதினக் கூட்டம்
சேலம், பிப்.5- அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் அமைப்பு தினம் புதனன்று கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங் கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு, சேலம் ஒய்எம் சிஏ கூட்டரங்கத்தில் புதனன்று கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சக்ரவர்த்தி தலைமை வகித்தார். இதில், ஓய்வூதியர்களுக்கு அளித்த வாக்குறுதியின் படி, 70 வயது கடந்தவர்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டது. இதில், சங்கத்தின் மாவட் டத் தலைவர் நடராஜன், செயலாளர் ராஜ்குமார், பொரு ளாளர் அருணகிரி, துணைத்தலைவர் ஜோதி மதன், இணைச்செயலாளர்கள் அருள்மொழி, கோபால், கோவிந்தசாமி ஆகியோர் கருத்துரையாற்றினர். மாநில துணைத்தலைவர் சுப்ரமணியம் நிறைவுரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
யானை தாக்கியதில் ஜெர்மனைச் சேர்ந்தவர் பலி
யானை தாக்கியதில் ஜெர்மனைச் சேர்ந்தவர் பலி கோவை, பிப்.5- வால்பாறை பள்ளத்தாக்கு பகுதியில் யானை தாக்கி யதில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந் தார். ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மைக்கேல் ஜூர்சன் (77) என்பவர் இரு சக்கர வாகனத்தில் செவ்வாயன்று மாலை வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, ரேஞ்ச் நெடுஞ்சாலையின் டைகர் பள்ளத் தாக்கு பகுதியில் யானை ஒன்று மைக்கேல் ஜூர்சன் மீது தாக்கியது. படுகாயம் அடைந்த அவரை வனத் துறை ஊழியர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாட்டர் ஃபால்ஸ் எஸ்டேட் மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அனுமதிக்கப்படாத வழித்தடத்தில் இயங்கிய பேருந்துகள் பறிமுதல்
கோவை, பிப்.5- அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயங் காமல், வேறு வழித்தடத்தில் இயங்கிய தனி யார் பேருந்துகளை கோவை மாநகர காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கோவை மாநகர எல்லைக்குள், தனியார் நகர பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகள் அதற்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் இயங்கி வருகின்றதா என்பது குறித்து மாந கர காவல்துறையால் சோதனை செய்யப்பட் டது. இதில், கோவை மாநகர காவல் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் இரண்டு தனியார் நகர பேருந்துகள் தங்களுக்கு அனுமதிக்கபட்ட வழித்தடத்தில் இயக்காமலும், ஒரு நகர பேருந்து அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தை யும் தாண்டி நீட்டிப்பு செய்து இயக்கியதும், ஒரு சிற்றுந்து அனுமதிக்கப்பட்ட வழித்தடத் தில் இயக்காமலும் இருந்தது கண்டறியப் பட்டு, மேற்படி வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வட் டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைக் கப்பட்டது. மேலும், விதிமீறலில் ஈடுபட்ட மேற் படி வாகனங்களின் அனுமதிகளை (Permit) ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவல ருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
வேட்டை தடுப்பு சிறப்பு ரோந்துப் பணி தொடக்கம்
உதகை, பிப்.5- வனவிலங்கு வேட்டையை தடுக்க தமிழ்நாட்டில் முதன்முறையாக நீலகிரியில் வேட்டை தடுப்பு சிறப்பு ரோந்துப் பணியை செவ்வாயன்று தொடங்கினர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில் முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடகாவில் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரளா வனவிலங்கு சரணாலயம் என மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் மாவட்டமாக நீலகிரி மாவட்டம் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு எல்லையில் வனவிலங்குகள் வேட்டை அதிகரித்து இருப்பதால் இதனை முழுமையாக தடுக்கும் வகையில் நீலகிரி மாவட்ட வன அலுவலர் கௌதம் தலைமையில், வனசரகர் சசிகுமார் மேற்பார்வையில் மூன்று மாநில எல்லையான பைக்காரா சந்திப்பில் வன ஊழியர்கள் முதல் முறையாக வன குற்றங்களைத் தடுக்க இரவு சிறப்பு ரோந்துப் பணியை செவ்வாயன்று மேற்கொண்டனர். மேலும் 10 குழுக்கள் தனித்தனியாக பல்வேறு இடங்களில் வாகன தணிக்கைகளையும் ஈடுபட்டனர்.
உரிமம் இன்றி பார் நடத்தியவர் கைது
உரிமம் இன்றி பார் நடத்தியவர் கைது சேலம், பிப்.5- அனுமதியின்றி மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாரா யம் இருப்பதாக வீடியோ எடுத்து வெளியிட்ட விவகாரத்தில், உரிமம் இன்றி மதுக்கூடம் நடத்தியவரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம், வளையமாதேவி பகுதியில் அரசு டாஸ் மாக் கடையின் (7142) மதுக்கூடத்தில், காலையிலேயே மது பாட்டில்களோடு சாராய பாக்கெட்டுகள் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர் பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவின் பேரில், போலீசார் விசாரணை மேற் கொண்டனர். விசாரணையில் ஆத்தூர், பாரதியார் தெருவை சேர்ந்த ரவி (44) என்பவருக்கும், கல்லாநத்தம் பகுதியைச் ஜோதிவேல் என்பவருக்கும், டாஸ்மாக் மதுக்கூடம் ஏலம் எடுப்பதில் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது. இந்நிலையில், ரவியின் நண்பர்கள் இளங்கோ மன்னன், சரண், வினோத் ஆகியோருடன் சேர்ந்து வளைய மாதேவியில் ஜோதிவேல் நடத்தி வரும் மதுக்கூடத்தில் அனுமதியின்றி மது பாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை சாக்கு மூட்டையில் வைத்து விற்பதாக சித்தரித்து வீடியோ எடுத்து வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக் கில் செயல்பட்டதாக ரவி, இளங்கோ மன்னன், வினோத், சரண் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அனுமதியின்றி பார் நடத்திய தாக ஜோதிவேலையும் போலீசார் கைது செய்தனர்.