districts

விடுதலை போராட்ட வீரர் ‘என்.சங்கரய்யா’ போட்டித்தேர்வு இலவச பயிற்சி மையம் துவக்கம்

திருப்பூர், ஆக.4- விடுதலைப் போராட்ட  வீரர் என்.சங்கரய்யா பெய ரில், அரசு வேலைக்கான போட்டித்தேர்வு இலவச பயிற்சி மையம்  திருப்பூரில்  ஞாயிறன்று துவங்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, இலவசமாக பயிற்சியளிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளை யம் புதூர் கிளை ஏற்பாடு செய்தது. அதன்படி, ஞாயிறன்று காலை அவிநாசி சாலையில் உள்ள கிளை அலுவலகத்தில், விடுதலைப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா போட்டித் தேர்வு இலவச பயிற்சி மையத் தொடக்க விழா நடைபெற்றது. கிளை உறுப்பினர் எஸ்.சேகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் பயிற்சி மையத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றினார். கல்வியாளர் கணேஷ், பயிற்சியின் நோக்கம் குறித்து உரை யாற்றினார். மூத்த தோழர் விழிப்பு நடரா ஜன், நகரச் செயலாளர் ச.நந்தகோபால் உள் ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.  இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், நகரக் குழு உறுப்பினர்கள் அ.ஆறுமுகம், த.நாக ராஜன், பி.சின்னச்சாமி, அ.உமாநாத், ஆர். சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இம்மையம், ஞாயிற்றுக்கிழமை தோறும்  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை  நடைபெறும். போட்டித் தேர்வுகளுக்குத் தயா ராகும் மாணவர்கள், தங்களைப் பதிவு செய்து  கொண்டு, தினசரி படிக்கவும் இந்த அலுவ லகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது முற்றிலும் கட்டணமில்லா கல்விச் சேவையா கும். மாணவர்கள் அனைவரும் பயன்படுத் திக் கொள்ள வேண்டும், என சிபிஎம் தலைவர் கள் கேட்டுக்கொண்டுள்ளனர். கிளைச் செய லாளர் என்.விஸ்வநாதன் நன்றி கூறினார்.