உடுமலை, நவ.13- ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக் கோட்டத் தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாண விகளுக்கு பரிசளிப்பு விழா புதனன்று மாவட்ட வன கோட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. வன உயிரின வார விழாவினை கொண்டாடும் வகையில், ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக் கோட்டத்தில், திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஓவிய, கட்டுரை மற்றும் பல்வேறு போட் டிகள் அக்டோபர் முதல் வாரத்தில் நடத்தப்பட்டது. இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆயிரத்திற் கும் மேற்ப்பட்டோர் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர் கள் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பெற்றிருந்தனர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புதனன்று பரிசளிப்பு மற்றும் சான்றி தழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதை திருப்பூர் வன கோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா தலை மையேற்று நடத்தினார். பயிற்சி உதவி வனப் பாதுகாவலர் கீதா, உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு துணை இயக்குனர் பரிசுகளை வழங்கி, வன உயிரினங்கள் மற்றும் காடுகளைப் பாதுகாப் பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.