நாமக்கல், பிப்.6- நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத் தின் தீர்ப்பின்படி, வங்கி நிர்வாகம் சார் பில், பாதிக்கப்பட்ட வாடிக்கையாள ருக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங் கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு அருகே உள்ள ஆண்டிபாளை யத்தைச் சேர்ந்தவர் அருண் பிரசாத் (35). இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், திருச்செங்கோட்டில் உள்ள அரசு வங்கி ஒன்றில் ரூ.2.57 லட் சம் கல்வி கடன் பெற்றுள்ளார். அவரது தந்தை கடனுக்கு ஜாமீன் கையெழுத்து செய்துள்ளார். சரிவர கடன் தொகை களை செலுத்தாததால், கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம், அருண் பிர சாத் மற்றும் அவரது தந்தை மீது வங்கி நிர்வாகம் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. 2017 ஆம் ஆண்டு ஏப் ரல் மாதம், தந்தையும், மகனும் வங் கிக்கு கடனை செலுத்திவிட்டனர். அப் போதே அவர்களுக்கு கடன் முடிக்கப் பட்டதற்கான சான்றிதழை வங்கி வழங் கியுள்ளது. கடனை செலுத்திய பின்ன ரும், அருண் பிரசாத் மற்றும் அவரது தந்தை மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை வங்கி திரும்பப் பெறவில்லை. மேலும், இவர்களுடைய வங்கிக்கடன் கணக்கை ரிலையன்ஸ் அசட்ஸ் ரீகன்ஸ்ட் ரக்சன் கம்பெனிக்கு வங்கி விற்றுவிட் டது. ரூ.7 லட்சம் செலுத்த வேண்டும் என்று அந்த நிறுவனம் வற்புறுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை யும், மகனும் வங்கியின் மீதும், அசட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் மீதும், நாமக் கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் கடந்த ஜன.7 ஆம் தேதி தேதியன்று நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், வங்கியின் சேவை குறைபாட்டால் வழக்கு தாக்கல் செய்தவர்களுக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வங்கி வழங்க வும், முடிக்கப்பட்ட கடன் கணக்கை தனி யார் நிறுவனத்திற்கு விற்பனை செய் தது தவறு என்று கடிதம் வழங்கவும் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன் றம் வங்கிக்கு உத்தரவிட்டது. இதைய டுத்து கடந்த ஜன.23 ஆம் தேதியன்று வங்கியின் சார்பில், அருண் பிரசாத் மற்றும் அவரது தந்தையிடம் வங்கி இழப்பீட்டுத் தொகையை வழங் கியது. மேலும், வருத்தம் தெரிவித்து கடி தமும் வங்கி நிர்வாகம் வழங்கியது. தொடர்ந்து, நீதிமன்ற தீர்ப்பை நிறை வேற்றி விட்டதாக வங்கியின் சார்பில், வியாழனன்று நுகர்வோர் நீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.