districts

img

தென்னை விவசாயத்தை அழிக்கும் ‘வெள்ளை ஈ’ இழப்பீடு வழங்க தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

ஈரோடு, ஜூலை 31- ‘வெள்ளை ஈ’யால் பாதிக்கப் பட்ட தென்னை மரத்திற்கு இழப் பீடு வழங்க வேண்டும் என தென்னை விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தென்னை விவசா யிகள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட முதல் மாநாடு, பெருந்துறையில் புதனன்று நடைபெற்றது. மாவட்ட  அமைப்பாளர் டி.பி.கோபிநாத் தலைமை வகித்தார். தென்னை விவசாயிகள் சங்க மாநிலத் தலை வர் மதுசூதனன் தொடக்க உரை யாற்றினார். தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைத்தலைவர்  பி.டில்லி பாபு சிறப்புரையாற்றி னார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனு சாமி வாழ்த்திப் பேசினார். இம்மா நாட்டில், கொப்பரை தேங்காய் கிலோ ரூ.140க்கு ஒன்றிய அரசு கொள்முதல் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெயை தமிழ்நாடு  முழுவதும் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து பாமாயில், ரீபைண்ட் ஆயில் போன்ற எண்ணெய்கள் இறக்குமதி செய்வதை தடை விதிக்க வேண்டும். தென்னை விவசாயத்தை அழிக்கும் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தி, பாதிக்கப்பட்ட தென்னை மரங்க ளுக்கு மரத்திற்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். மாவட்டங்கள் தோறும் தென்னை சார்ந்த தொழில்களை உருவாக்கி, மதிப்பு கூட்டு பொருட்களை வெளி  நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். அரசு சார்பில் வழங்கப்ப டும் மானியங்கள், அனைத்து விவ சாயிகளுக்கும் கிடைக்க வழிவகை  செய்ய வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் ஈரோடு மாவட்டத் தலைவராக அர் ஜுனன், செயலாளராக டி.பி.கோபி நாத், பொருளாளராக சென்னியப் பன், துரைசாமி, துணைத்தலைவ ராக துரைசாமி, துணைச்செயலா ளராக சக்திவேல் மற்றும் 15 பேர் மாவட்டக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். முடிவில்,  தமிழ்நாடு தென்னை விவசாயிகள்  சங்க மாநில பொதுச்செயலாளர் விஜய முருகன் நிறைவுரையாற்றி னார். ஜீவானந்தம் நன்றி கூறி னார்