உடுமலை, மார்ச் 6 - காவல்துறையினரால் போடப்பட்ட பொய் வழக்கிலிருந்து மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியினர் திங்களன்று விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 2012 ஆம் ஆண்டு டிச.20 ஆம் தேதி மாதர் சங்கத்தின் சார்பில் உடு மலை மத்திய பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதை யொட்டி பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அப்போதைய மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடிமங்க லம் ஒன்றியச் செயலாளர் ரங்கநாதன் மற்றும் உடுமலை தாலுகா குழு உறுப் பினர் ஜெகதீசன் ஆகியோர், அருகில் உள்ள டீ கடைக்கு சென்றபோது, அந்த கடையில் டீ டம்ளர்கள் மிகவும் அசுத்த மாக இருந்துள்ளது. அதை கடையில் இருந்தவரிடம் தெரிவித்து விட்டு வரும் போது கடையிலிருந்த நபர்கள் திட்ட மிட்டு இருவரையும் தாக்கினர். இத னால் காயம் அடைந்த இருவரும் உடு மலை அரசு மருந்துவமனையில் அனும திக்கப்பட்டனர். உடுமலை காவல்துறை உதவி ஆய்வாளர் ஜேம்ஸ் மற்றும் சிறப்பு காவலர் நாகராஜ் இருவரும் தவறு செய்த டீ கடைக்காரர் மீது நடவ டிக்கை எடுக்காமல், மார்க்சிஸ்ட் கட்சியி னர் மீது வழக்கு பதிவு செய்து மருத்து வமனையில் இருந்து கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து, உடுமலை மற் றும் மடத்துக்குளம் கட்சி கமிட்டிகள் சார்பில் அன்றைய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மறைந்த தோழர் கே.தங்கவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 18 நாட் கள் கழித்து கோவை மத்திய சிறையி லிருந்து மார்க்சிஸ்ட் கட்சியினர் நிபந் தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கடந்த 11 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கிலிருந்து மார்க் சிஸ்ட் கட்சியினர் திங்களன்று விடுவிக் கப்பட்டனர். இந்த வழக்கில் பணம் எது வும் பெறாமல் வழக்கை நடத்திய வழக் கறிஞர் சிவக்குமாருக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக் கப்பட்டது.