கோவை, ஏப்.14- சாதிகளற்ற சமத்துவ தேசத்தை உரு வாக்க, சனாதன சக்திகளை வேரறுப் போம் என புரட்சியாளர் டாக்டர் அம்பேத் கரின் 131 ஆவது பிறந்தநாளில் உறுதி மொழி ஏற்கப்பட்டது. புரட்சியாளர் பாபா சாகேப் அம்பேத் கரின் 131 ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் வியாழனன்று எழுச்சியோடு கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதி யாக கோவை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, சிஐ டியு, மாதர், வாலிபர் மற்றும் மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் சார் பில் அம்பேத்கர் பிறந்தநாள் உறுதி மொழியேற்பு நிகழ்வு நடைபெற்றது. கோவை சிவானந்த காலனியிலுள்ள உணவு தானிய கிடங்கு வளாகத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி யின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் மாவட்ட செயலா ளர் ஆறுச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் என்.ஜெயபாலன், சிஐடியு நிர்வாகி கே. ரத்தினகுமார், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ், மாண வர் சங்க மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, நகர செயலாளர் சி.சண்முகம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கட்ராமன், எம்.துரை, பி.மாதேஸ்வரன், பி.காளியப் பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர் திருச்செங்கோடு அருகே உள்ள நரிபள்ளத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மாவட்ட தலைவர் எம்.கணேஷ்பாண்டியன் தலைமையில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில், ஆண்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.ஆதிநாராயணன் மற்றும் சிஐடியு மாவட்ட உதவிச்செயலாளர் கோவிந்தராஜ், சிபிஎம் ஒன்றிய செயலா ளர் மனோகரன், நகர செயலாளர் ஐ.ராயப் பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம், படைவீடு பச்சாம்பாளையத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட தலைவர் சி.துரைசாமி தலைமையில் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.பெருமாள் உட்பட திரளான விவசாயி கள் கலந்து கொண்டார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாவட்டக்குழு அலுவலகத் தில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணி வித்து பிறந்த நாள் விழா கொண்டா டப்பட்டது. இதில், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் கி.தங்கமணி, மாணவர் சங்க மாநில தலைவர் ஏ.டி.கண்ணன், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கு.சிவராஜ் உட்பட பலர் கலந்து கொண்ட னர். ராசிபுரம் வட்டம், பெருமாகவுண்டம் பாளையம் கிராமத்தில் இந்திய மாண வர் சங்கத்தின் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், மாணவர் சங்க மாநிலத் தலை வர் ஏ.டி.கண்ணன், மாவட்ட தலைவர் எம்.தேன்மொழி, மாவட்ட செயலாளர் தே.சரவணன், மாவட்ட துணை தலை வர் எம்.தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஓட்டப்பந்த யம், இசை நாற்காலி போன்ற விளை யாட்டு போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட் டது.
திருப்பூர்
திருப்பூர் காமராஜர் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்றனர். இதில், தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆர்.குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ச.நந்த கோபால் சமூக நீதி முழக்கங்களை எழுப்பி, சமத்துவ நாள் உறுதிமொழியை வாசித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண் ணன் அம்பேத்கர் பிறந்தநாள் உரை யாற்றினார். துணைச் செயலாளர் சி.கே. கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் கள் எஸ்.சுந்தரம், ரமேஷ், வேலம்பாளை யம் பொருளாளர் எஸ்.வேல்முருகன், வாலிபர் சங்க தெற்கு மாநகரத் தலைவர் ந.சஞ்சீவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.விஜயராகவன், சி.பரமசிவம், சி.முருகேசன், தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் பி.பி.பழனிசாமி, மாவட்ட தலைவர் எம்.அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் சி.ஜோதிமணி, மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட செயலா ளர் ஆ.சகாதேவன், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் கள் சங்க மாவட்ட செயலாளர் மு.சங்க ரன், சுமைப்பணி தொழிலாளர் சங்க தலைவர் ரங்கநாதன், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க தலைவர் வி.சுரேஷ் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டம் பவானி பேருந்து நிலையம் அருகில் வியாழனன்று அண் ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் சமத் துவ நாளாக அனுசரித்து உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் பி. ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ் வில் தாலுகா செயலாளர் எஸ். மாணிக் கம், அனைத்து வகை மாற்றுத்திறனாளி கள் சங்க ஈரோடு மாவட்ட சிறப்பு தலை வர் கே.எம்.பாலு மற்றும் ஏ.ஜெகநாதன், பி.கே.பாலசுந்தரம், பரிமளராஜன், நல் லம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர். தீண்டாமை ஒழிப்பு முண்ணனி சார் பில், ஈரோடு மூலப்பாளையத்தில் அம் பேத்கர் பிறந்த நாள் அனுசரிக்கப்பட் டது. இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர் பெரு மாள் தலைமை தாங்கினார். தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் சொங் கப்பன், பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங் கத்தின் குப்புசாமி, பழனிச்சாமி உள்ளிட் டோர் பங்கேற்றனர். அந்தியூர் ரவுண்டானா, க.மேட்டூர், கூடுமைனூர் ஆகிய இடங்களில் அம்பேத்கருக்கு மலர் மாலை அணி வித்து, வீரவணக்கம் செலுத்தி இனிப்பு கள் வழங்கப்பட்டது. இதேபோல், பெருந் துறை வாவிக்கடை மற்றும் சத்தியமங்க லத்தில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் சமத்துவநாளாக கொண்டப்பட்டது.
தருமபுரி
அண்ணல் அம்பேத்கரின் 131 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரூர் ரவுண் டானா அருகிலுள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் மாவட்டசெயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோ.அருச்சுணன், எம்.முத்து, அரூர் ஒன்றியச் செயலாளர் பி.குமார், தமிழ் நாடு விவசாயிகள் சங்க வட்டசெயலா ளர் எஸ்.கே.கோவிந்தன்,வட்ட தலைவர் ஏ.நேரு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டசெயலாளர் பி.வி.மாது, தமுஎகச மாவட்ட செயலாளர் நவகவி மற்றும் கே.என்.ஏழுமலை, எம்.கோபால் ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி வட் டம் கடத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு வட்டசெயலாளர் தனுசன் மாலை அணி வித்தார். கணேசன், செல்வம், கண்ணன், குப்பன் , தீனா, முனியப்பன், கார்த்தி உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். பென்னாகரம் அரசு தலைமை மருத் துவமனை முன்பு உள்ள அம்பேத்கரின் உருவ சிலைக்கு பல்வேறு அமைப்பி னர் மாலை அணிவித்து மரியாதை செய் தனர். இதில், சிபிஎம் பென்னாகரம் பகுதி செயலாளர் வி.ரவி, ஒன்றிய செயலா ளர் சக்திவேல், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் ஜீவானந்தம், எம்.சிவா, ராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பகுதிக் குழு தலைவர் தேவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம்
சட்டமேதை அண்ணல் அம்பேத் கரின் 131 ஆவது பிறந்தநாள் விழா சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் எழுச்சியுடன் கொண்டாடப்பட் டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார் பில் சேலம் அரசு கலைக்கல்லூரி அருகி லுள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது. இதில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணை தலைவர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். குணசேகரன், மாவட்டக்குழு உறுப்பி னர் எம்.சேதுமாதவன், மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், வடக்கு மாந கர செயலாளர் என்.பிரவீன்குமார், வாலி பர் சங்க மாவட்ட செயலாளர் வெங்க டேஷ், மாவட்ட பொருளாளர் வி.ஜெகநா தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் என்.திருவரங்கன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சங்கத் தின் மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் செல்வம் உள் ளிட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மற் றும் ஓய்வுபெற்றோர் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், சிபிஎம் ஓமலூர் தாலுகா செயலா ளர் என்.ஈஸ்வரன், கமிட்டி உறுப்பினர் கள் சின்ராஜ், மகேஸ்வரி, கிளை செயலா ளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண் டனர். மேட்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் வீ.இளங்கோ, சிஐடியு நிர் வாகி செ.கருப்பண்ணன், அரசு போக்கு வரத்து சங்க நிர்வாகி சிங்கராயன், அரசு ஊழியர் சங்க நிர்வாகி கலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், சேலம் மாநகர கிழக்குப்பகுதி, தாதம் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
ஆதித்தமிழர் பேரவை
ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான், சேலத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாட உத்தர விட்ட தமிழக அரசிற்கு தனது வாழ்த்துக் களையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.