கோவை, டிச.24– ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள மக்கள் ஒற்றுமையை சீர் குலைக்கும் பாசிச பாஜகவை விரட்டு வோம் என தந்தை பெரியார் நினைவு நாளில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தந்தை பெரியாரின் 48 ஆவது நினைவு நாளையொட்டி கோவை புலி யகுளத்தில் உள்ள பெரியாரின் உரு வச்சிலைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநா பன் தலைமையில் சிபிஎம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத் தினர். இதனைத்தொடர்ந்து மக்களி டையே பிரிவினையை உருவாக்கும் பாசிச பாஜகவை நாட்டை விட்டு விரட் டுவோம், மக்கள் ஒற்றுமையை பாது காப்போம். தந்தை பெரியார் நினைவு நாளில் மார்க்சிய, அம்பேத்கரிய, பெரி யாரிய அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த சபதத்தை மேற்கொள்வோம் என உறுதியேற்றனர். முன்னதாக, இந்நிகழ் வில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், சிபிஎம் கிழக்கு நகரக்குழு உறுப்பினர் த.நாக ராஜ், மாதர் சங்க மாநிலக்குழு உறுப் பினர் சுதா, வழக்கறிஞர் ஜோதிகுமார், சிபிஎம் கிளை செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று தலைமை மின் வாரிய அலுவலகம் முன்பு சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார் பில் தந்தை பெரியார் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், சித்தாபுதூர் உள்ளிட்ட மாவட் டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி சார் பில் தந்தை பெரியாரின் உருவப்படத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.